சூரியன்-தந்தை, மகன், அரசன், பிரதமர், ஜனாதிபதி, நிர்வாகி, முதல்வர், அரசு. அதிகாரிகள், அரசியல்வாதிகள், ஆன்மா, கடவுள், பெயர் & புகழ், வெளிச்சம், தலைநகரம், அதிகாரம், அரண்மனை, வலது கண்,வலது பக்கம், ஹவுஸ் வலது பக்க ஜன்னல்.
சந்திரன்-அம்மா, பெண், மாமியார், மனைவி, கலைஞர்கள், ஹோட்டல் தொழில், பால் பண்ணை, ஆடம்பரமான பொருட்கள்,பயனங்கள், விவசாயம், கவிதை மற்றும் கட்டுரை எழுதுதல், மளிகை கடை, மருத்துவ கடை, மார்பகம், வயிறு, சிறுநீர் பாதை, இடது கண், வீட்டின் இடது பக்க ஜன்னல்,குளியல் அறை & மலசலம் கழிக்கும் இடம், தண்ணீரால் நிரம்பிய இடங்கள், கடல், ஏரி, ஆறு, மனம், இடப்பெயர்ச்சி, இடம் மாற்றம், குங்குமம், கலை, திரவ பொருட்கள், உணவு பொருட்கள், மேகங்கள், மழை,திருடன், விபச்சாரம், செய்தி, இயக்கம், ஒளி,திருட்டுத்தனமான செயல்பாடுகள், ஜோதிடம்,வேதங்கள், மருத்துவம், துணிகள்.
செவ்வாய் (குஜன்)-2ம் இளைய சகோதரர், கணவன், போலீஸ், பாதுகாப்பு படை, பொறியாளர், விளையாட்டு வீரர், தொழிற்சங்க தலைவர்,அறுவ சிகிச்சை மருத்துவம், விவசாயம், புருவம், பற்கள், இரத்தம், இதய பகுதி, விந்து, எலும்பு மஜ்ஜை,மூக்கு பாலம்,படுக்கையறை, அடுப்பு, ஆற்றல் மீட்டர், மின்மாற்றி, மின் மோட்டார்ஸ், ஹீட்டர்கள், கற்கள், தூண்கள், வீட்டு விட்டங்கள், பூமி, மலைத் தொடர், மலை, பாறைகள், சுரங்கங்கள், உலோகங்கள், ஈட்டி, தோட்டாக்கள், எதிரி, வன் பொருள், கத்தரிக்கோல், முக்கோண வடிவம், சக்தி, ஊசி, கத்தி, முள், அம்பு, இயந்திரங்கள், ஆயுதங்கள், விவசாயம்.
புதன்-மாமா, மாமனார், 3ம் இளைய சகோதரர், பெண் நண்பர்கள், பாய் நண்பர், இளம் சகோதரி, மனைவி, வணிகம் மற்றும் வர்த்தகம், புத்தக விற்பனை மற்றும் பதிப்பு, கணக்காளர், கணக்காய்வாளர், கவிஞர், எழுத்தாளர், நகைச்சுவை நடிகர், ஜோதிடம், பெயிண்டர், வழக்கறிஞர், ஆசிரியர், பேராசிரியர், விரிவுரையாளர்,விஞ்ஞானிகள், ஆராய்ச்சி பொறியாளர், மளிகை கடை, கைகள், கழுத்து, தோள், தோல், நெற்றி, மொழி, தொண்டை, சுவர் பிளாஸ்டரிங், பார்வையாளர் அறை, படிக்கும் அறை, கார்டன், பூங்கா, நிலம், கல்வி, வர்த்தகம், அழகு, புதைசேற்று சுவர்கள், பயிர்கள், இலைகள், தகவல், பதிவு, பேச்சு, சொற்றிரம், அறிவு, செயல்பாடு, எண்ணங்கள், தந்திரங்கள், ராஜதந்திரம், தந்திரம், மென்மையான விஷயங்கள், மண்,
வியாழன் (குரு)-ஜீவகாரகர் (சொந்தம்), தொப்பை (குடல் பகுதி), மூக்கு, கொழுப்பு,தொடை, பாதம், பறிப்பு,வீட்டின் கடவுள் அறை, நீதிபதி, வழிகாட்டி, ஆசிரியர், தொகுப்பாளர், கல்வி அமைச்சர், மேலாளர், வழக்கறிஞர், கணக்காளர், தணிக்கையாளர், வேதங்கள், கோயில்கள், தத்துவம், தேன், கடவுள், மாடு, கௌரவம்,பெருமரியாதை, மரியாதை,உண்மை,பொறுமை, அடக்கம்.
சுக்கிரன்-சகோதரி,மனைவி,மகள்,மைத்துனி,விபச்சாரி,விந்து,பெண்ணுருப்பு, கருப்பைகள், கன்னம், இதயம், சமையலறை, இசை, நடனம், நடிப்பு, ஃபேன்சி ஸ்டோர்ஸ், நிதி, வங்கி, பாடல், நகை கடை, பணக் கடன், மது கடை, கால்நடை துறை,துணி வியாபாரி, அன்பு, கவிதைகள், பூ, உடலுறவு, திருமணம், வீடு, இன்பம், வாகனங்கள், ஆடம்பரம், வாசனை, செல்வம், மயக்குதல், சுந்தரமானது, இனிப்பு, போதை, அழகான தோற்றம், அழகு, இரகசிய விடயங்கள், நடனம் அரங்கு, சினிமா திரையரங்கு, மகளிர் குழு.
சனி-மூத்த சகோதரர், அடிமைத்தனம், குறைந்த ஊதியம் வேலைக்காரன், தொழில்,கேரியர், வேலை, சின், பாதம், பிட்டம், ஆசனவாய்,முட்டிகள், முழங்கால், செரிமானபை, வீட்டின் சேமிப்பு அறை, டைனிங் ஹால்,சாலை,காற்று சம்பந்தமான நோய்கள்,உல்லன் துணிகள்,இரும்பு,ஈயம், சுழல் காற்று, புயல், செங்கல் சூளையாளர், சூதாட்டம்,எண்ணெய் சுரங்கம்.
ராகு-தந்தைவழி தாத்தா, வெளிநாட்டு பயணங்கள்,மின்னணுவியல், வான் பயணவியல்,நடிகர், புகைப்படம் எடுத்தல், சிபிஐ அதிகாரி,பாதுகாப்பு, கடத்தல், திருடன், வாய், தலை, காது,உதடுகள், குடல், மலக்குடல், விரைகள், முதன்மை நுழைவாயில்,பழைய வீடு, பாழடைந்த சுவர்,, சுவற்றில் விரிசல், இருண்ட அறை, பெரிய மண்டபம், கோபுரம்,முட்டை வடிவம், தனிமையான பகுதி,பரந்த சாலை, சுற்று வட்டம்,வட்ட வடிவம், இருள்,உடல்நலத்தை கவனிப்பு,மாயத்தோற்றம், மாயை, நிழல், குடை, சக்கர வடிவம்,சக்கரத்தின் சுற்றளவு, , விளையாடும் இடம், பெரிய அளவு,மொட்டை மாடி, மரங்களின் மேல் பரப்பு, காய்ந்த மரம்,ரப்பர், பிளாஸ்டிக், உலர்ந்த தோல், கிடங்கு, காபி கொட்டை, கயிறு, பாம்புகளின் இறைவன்,ஊழல், விபத்துகள், இரைப்பை தொல்லைகள், பாம்பின் வாய்.
கேது-தாய்வழி தாத்தா, முடி, பிறப்புறுப்புகள், நரம்புகள், ஆசனவாய், தாடி, மாடி படிக்கட்டு, புகைபோக்கி, பின் வாசல், குறுகிய சந்து (அல்லது) அறை, குளியலறை, ஜோதிடம், மதம், மறைபொருள் ஆய்வு, கோவில், சட்டம்,நூல், மது, செயல் தடை, இரகசிய நடவடிக்கை, தீர்வு, மண் பானை, காவி துணி, பிரம்மா,சமுத்திரம், மருத்துவமனைகள், பிரார்த்தனை கூடங்கள், மரங்களின் வேர், பாம்பின் வால், கயிறு, சங்கிலி, ஈனைய வலை, சாக்கடை, காய்ந்த புல், மூலிகைகள், யானை உடற்பகுதி, ஆலமரம், எழுதுதல், கொடி, இரகசியம், சர்ச்சை, வழக்கு, தடைகள்.
முதல் வீடு : இதை வைத்து ஜாதகருடைய நிறம், உருவம், உயரம், குணாதிசயங்கள் முதலியவற்றை அறியலாம். ஜாதகர் ஒல்லியானவரா, இல்லை பருமனானவரா, கோபம் உள்ளவரா, இல்லை சாந்தமானவரா என்றும் அறியலாம். அவர் உடல் நலத்தைப் பற்றியும் அறியலாம். அவர் வாழ்க்கையில் உயர்ந்த நிலைக்குப் போவாரா இல்லை தாழ்ந்த நிலைக்குப் போவாரா, என்பது பற்றியும் அறியலாம். உடல் பாகத்தில் தலையைக் குறிப்பது முதல் வீடு தான். ஒருவர் சொந்த ஊரில் வாழ்வாரா அல்லது அந்நிய தேசத்தில் வாழ்வாரா என்பது பற்றியும் முதல் வீட்டை வைத்துத்தான் சொல்ல வேண்டும். முதல் வீட்டில் யார், யார் இருக்கிறார்கள், முதல் வீட்டின் அதிபதி எங்கு இருக்கிறார் அதாவது இலக்கினாதிபதி எங்கு இருக்கிறார், முதல் வீட்டை எந்தெந்த கிரகங்கள் பார்க்கின்றன என்பதை வைத்தும் பலன் சொல்ல வேண்டும்.
இரண்டாவது வீடு : இது குடும்பத்தைக் குறிக்கிறது. பணவரவு, செலவு போன்ற பொருளாதாரத்தையும் இது குறிக்கிறது. அதைத்தவிர நகைகள், வெள்ளிப் பாத்திரங்கள், Securities போன்ற சொத்துக்களையும் கூறலாம். ஆடை, அணிகலன்களையும் இந்த வீட்டை வைத்துக் கூறலாம். வங்கியில் உள்ள பண நிலைமை, Promisery Notes, போன்றவற்றையும் இந்த வீட்டை வைத்துத்தான் கூறவேண்டும். இரண்டாம் வீட்டை வாக்குஸ்தானம் என்றும் அழைப்பார்கள். ஒருவர் கனிவாகப் பேசுவாறா, அல்லது கடினமாகப் பேசுவாறா, நன்றாகப் பேசுவாறா அல்லது திக்கிதிக்கிப் பேசுவாறாஎன்றும் இந்த வீட்டை வைத்துக் கூறலாம். கண்பார்வையையும் இந்த வீட்டை வைத்துக் கூறலாம். ஒருவர் கண்ணாடி அணிபவரா அல்லது இல்லையா என்பதையும் இந்த வீட்டை வைத்து கூறலாம். பொதுவாக எந்த வீடாக இருந்தாலும் அந்த வீட்டில் நல்ல கிரகங்கள் இருந்தால் அந்த வீட்டைக் குறிப்பன நல்லதையே செய்யும். தீய கிரகங்கள் இருந்தால் அந்த வீட்டைக் குறிக்கும் காரகத்துவங்கள் கெட்டு விடும். உதாரணமாக 2-ம் வீட்டை எடுத்துக் கொள்ளுங்கள். 2-ம் வீடு குடும்பத்தைக் குறிக்கிறது. அதில் சனி இருக்கிறது எனக் கொள்வோம். சனி ஒரு பாவ கிரகம் அல்லவா! சனி எதையும் குறைவாகவும், தாமதமாகவும் கொடுப்பார். குடும்பம் சிறியதாக இருக்கும். பணவரவு குறைவாக இருக்கும். குடும்பத்தில் நிம்மதியும் குறைவாகவும் இருக்கும்.
மூன்றாம் வீடு : இந்த வீட்டைக் கொண்டு ஒருவரின் இளைய சகோதரம், ஒருவரின் தைரியம், அண்டை வீட்டிலுள்ளவர்கள், குறுகிய பயணம், ஆகியவற்றையும் கூறலாம். கடிதப் போக்கு வரத்துக்கள், தகவல் பரிவர்த்தனைகள், வீடு மாறுதல் ஆகியவற்றையும் இந்த வீட்டை வைத்துக் கூறலாம். இந்த வீட்டில் கேது இருப்பாரேயாகில் அவர் கலகங்களை விளைவிப்பவை என்றும் கூறலாம். இன்னும் நகைச்சுவையாகக் கூறப்போனால் அவரைக் "கலியுக நாரதர்" எனவும் கூறலாம். உடல் பாகங்களில் காதுகள், தொண்டை, கைகள், நரம்பு மண்டலம், ஆகியவற்றை இந்த 3-ம் வீடு குறிக்கிறது. இந்த வீட்டை தைரிய ஸ்தானம் என்றும் கூறுவார்கள். இந்த வீட்டில் செவ்வாய் இருந்தால் அவர் மிக்க தைரியசாலியாக இருப்பார். ஏனெனில் செவ்வாயானவர் வீரமிக்க கிரகம். ஒருவருக்கு வீரத்தைக் கொடுப்பவர் செவ்வாய் தான். அங்கே சனி இருந்தால் அவர் அவசரப் படாமல் நிதானத்துடன் செயல் படுவர். யோஜனை செய்து தான் முடிவு எடுப்பார். அவசரப் பட மாட்டார்.
நான்காம் வீடு : இது தாயாரைக் குறிக்கும் வீடு. கல்லூரிவரையிலான படிப்பு, வீடு, வாசல் போன்ற ஸ்திர சொத்துக்கள், பூமிக்குள் இருக்கும் புதையல், கால்நடைகள், பசுக்கள், விளைநிலங்கள், அதிலிருந்து கிடைக்கும் தான்யங்கள் ஆகியவற்றைக் குறிப்பதும் இந்த நாலாவது வீடுதான். ஒருவருக்கு 4-ம் வீட்டில் செவ்வாய் இருக்கிறார் என்க் கொள்ளுங்கள். அவர் நிச்சயமாக வீடு கட்டுவர். ஏனெனில் செவ்வாய் பூமிகாரகன். பூமிகார கனான செவ்வாய் 4-ம் வீட்டுடன் சம்பந்தப் பட்டதால் அவர் நிச்சயம் வீடு கட்டுவர். இதே செவ்வாய் 9-ம் வீட்டு அதிபதி எனக் கொள்வோம். இவருக்கு தகப்பனாரின் வீடு கிடைக்கும். ஏன்? 9-ம் வீடு தகப்பனாரைக் குறிக்கிறது. செவ்வாய் பூமிகாரகனாகி, 9-ம் வீட்டையும் குறித்து , ஸ்திரசொத்துக்களைக் குறிக்கும் வீடான 4-ம் வீட்டில் இருக்கிறார். ஆக இவருக்கு தகப்பனாரின் வீடு கிடைக்கும் எனக் கூறலாம்.
5-ம் வீடு : இதை புத்திர ஸ்தானம் என்று அழைப்பார்கள். இதைப் பூர்வ புண்ணிய ஸ்தானம் என்றும் அழைக்கல்லாம். அதாவது போன ஜென்மத்தில் ஒருவர் நல்லது செய்தவரா இல்லையா என்று இந்த வீட்டைக் கொண்டு முடிவு செய்யலாம். ஒருவருக்குக் குழந்தைகள் உண்டா அல்லது இல்லயா என்றும் முடிவு செய்யலாம். ஒருவருக்குக் கலைத்துறையில் நாட்டம் இருக்கிறதா அல்லது இல்லயா என்பது பற்றியும் இந்த வீட்டைக்கொண்டு முடிவு செய்யலாம். அதே போன்று, சினிமா, டிராமா, லாட்டரி, குதிரைப்பந்தயம், ஆகியவற்றையும் இந்த வீடுதான் குறிக்கும். ஒருவர் காதலித்துத் திருமணம் செய்வாரா இல்லையா என்பது பற்றியும் இந்த வீட்டைக் கொண்டு முடிவு செய்யலாம். ஆன்மீக வாழ்க்கையையும் இந்த வீட்டைக் கொண்டு தீர்மானம் செய்யலாம். வேதங்கள், மந்திரங்கள் ஆகியவற்றையும் இந்த வீட்டைக் கொண்டு தீர்மானம் செய்யலாம்.
6-ம் வீடு : கடன், வியாதி, உண்ணும் உணவு , வேலை செய்யும் இடம், ஒருவருடைய வேலைக்காரர்கள் ஆகிய வற்றையும் இந்த வீட்டைக் கொண்டு சொல்லலாம். கவலைகள், துக்கங்கள் தாய் மாமன் ஆகியவற்றைக் குறிப்பது இந்த வீடு தான். உதாரணமாக ஒருவருக்குக் கன்னியா இலக்கினம் எனக் கொள்ளுங்கள். இலக்கினாதிபதி புதன் 6-ம் வீடான கும்பத்தில் இருக்கிறார் எனக் கொள்ளுங்கள். புதன் 1-ம் வீட்டிற்கு அதிபத்யாகி 6-ம் வீட்டில் இருக்கிறார். அவர் உடல் நிலையில் நிச்சயமாகக் கோளாறு இருக்கும். ஏனெனில் புதன் 1-ம் வீட்டையும் 6-ம் வீட்டையும் குறிக்கிறார். ஆக இவர் உடலில் ஏதோகோளாரு இருக்கிறது எனக் கொள்ள வேண்டும். சரி! 2-ம் வீட்டின் அதிபதி சுக்கிரன் 6-ம் வீட்டில் இருக்கிறார் எனக் கொள்ளுங்கள். 6-ம் வீடு Employment என்று சொல்லுகின்ற வேலையைக் குறிக்கிறது. 2-ம் வீடு தனத்தைக் குறிக்கிறது. ஆகவே இவர் வேலைக்குச் சென்று பணம் சம்பாதிப்பர் எனக் கொள்ளலாம். இவ்வாறாக 6-ம் வீட்டிலுள்ள கிரகம் மற்ற எந்த வீட்டுடன் சம்மந்தம் கொண்டுள்ளதோ அதை வைத்துப் பலன் சொல்ல வேண்டும்.
7-ம் வீடு : திருமணத்தைக் குறிக்கும் வீடு இதுதான். வியாபாரத்தைக் குறிக்கும் வீடும் இது தான். ஒருவர் மரணத்தைக் குறிக்கும் வீடும் இது தான். பிரயாணத்தைக் குறிக்கும் வீடும் இது தான். ஒருவர் ஜாதகத்தில் 7-ம் வீட்டில் சனி இருக்கிறது எனக் கொள்ளுங்கள். சனிதான் எதையும் தாமதப் படுத்துபவர் ஆயிற்றே! ஆக இவருக்குத் திருமணம் தாமதம் ஆகும் எனக் கூறலாம். உதாரணமாக கடக இலக்கினக்காரர் ஒருவருக்கு 7-ம் இடமான மகரத்தில் சனி இருக்கிறது எனக் கொள்வோம். சனியானவர் 7-ம் வீட்டிற்கும், 8-ம் வீட்டிற்கும் அதிபதி. 7-ல் இருக்கிறார். அவர் திருமணத்தைத் தாமதப் படுத்துவதோடு சில சங்கடங்களையும் திருமணத்திற்குப் பிறகு கொடுப்பார். ஏனெனில் சனி 8-ம் வீட்டிற்கும் அதிபதியல்லவா! சரி! சனிக்குப் பதிலாக 6-ம் வீடு, 9-ம் வீட்டிற்கு அதிபதியாகிய குரு இருக்கிறார் எனக் கொள்ளுங்கள். திருமண வாழ்வு எப்படி இருக்கும்? 6-ம் வீடு என்பது 7-ம் வீட்டிற்குப் 12-ம் வீடு அல்லவா! திருமண வாழ்வு சுகப்படாது. பிரச்சனைகள் நிறைந்ததாக இருக்கும்.
8-ம் வீடு : ஒருவரின் ஆயுளைக் குறிக்கும் வீடு இது தான். பிதுரார்ஜித சொத்துக்கள், உயில்கள், இன்ஷ்ஷ¤ரன்ஸ், கிராட்டுவிட்டி, போனஸ் ஆகியவைகளைக் குறிக்கும் வீடு இதுதான். ஒருவர் மரணம் இயற்கையானதா அல்லது துர்மரணமா என்பதையும் இந்த வீட்டைக் கொண்டு அறியலாம். துன்பம், துக்கம், தோல்வி, தண்டனை, தடைகள், ஜெயில் தண்டனை, இவைகளையும் அறியும் வீடு இதுதான். இந்த வீட்டை "துஸ்தானம்" எனக் கூறுவர்கள். 8-ம் வீட்டில் சனி இருந்தால் ஒருவருக்கு தீர்க்காயுசு எனக் கொள்ளலாம். குரு இருந்தாலும் தீர்க்காயுசு எனக் கொள்ளலாம். பொதுவாக 8-ம் வீட்டில் உள்ள கிரகங்களோ, அல்லது 8-ம் வீட்டிற்கு அதிபதியோ தங்கள் தசா, புக்திகளில் நல்லதைச் செய்யாதென்பது பலரின் அபிப்பிராயம்.
9-ம் வீடு : தகப்பனர், போன ஜென்மத்தில் ஒருவர் செய்த பூர்வ ஜென்ம புண்ணியங்கள், பாபங்கள், நீண்ட பயணம், தெய்வ தரிசனம் செய்தல், உயர்கல்வி, முன்பின் தெரியாதவர்கள், ஆகியவற்றைக் குறிப்பது இந்த வீடு தான். உதாரணமாக 9-ம் வீட்டில் ஒருவருக்கு சனி, செவ்வாய் போன்ற பாப கிரகங்கள் இருக்கிறது எனக் கொள்ளுவோம். நிச்சயமாக அவருக்குத் தகப்பனார் அனுசரணையாக இருக்க மாட்டார். 9-ம் வீட்டைத் தவிர சூரியனின் நிலையையும் நாம் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். ஏனென்றால் சூரியன் பிதுர்காரகனல்லவா? 9-ம் வீட்டில் பாப கிரகங்கள் இருக்குமேயாகில் அந்த வீட்டின் காரகத்துவங்கள் எல்லாம் கெட்டு விடும்.
10-ம் வீடு : ஒருவரின் ஜீவனம், கெளரவம், சபைகளில் முக்கியத்துவம் ஆகியவற்றை 10-ம் வீட்டைக் கொண்டுதான் சொல்ல வேண்டும். தொழிலில் முன்னேற்றம், பதவி உயர்வு ஆகியவற்றையும் இதைக் கொண்டேதான் சொல்ல வேண்டும். ஒருவருக்கு அரசியல் நல்லபடியாக இருக்குமா அல்லது இருக்காதா என்றும் இந்த வீட்டைக் கொண்டுதான் சொல்ல வேண்டும். இதைக் கர்மஸ்தானம் என்றும் கூறுவார்கள். தாயார், தகப்பனாருக்குச் செய்யும் கர்மங்களையும் இந்த வீட்டைக் கொண்டுதான் சொல்ல வேண்டும். ஒருவரின் எஜமானர், அரசாங்கம் இவைகளையும் இந்த வீடுதான் குறிக்கிறது.
11-வது வீடு : இதை லாபஸ்தானம் என்று கூறுவார்கள். நமக்கு வரக்கூடிய லாபங்களையும், சுகங்களையும் அளிக்கக் கூடியது இந்த வீடுதான். மூத்த சகோதரத்தைப் பற்றியும் இந்த வீட்டை வைத்துக் கூறலாம். நண்பர்களையும் இந்த வீட்டை வைத்துத்தான் கூற வேண்டும். நல்ல கிரகங்கள் இந்த வீட்டில் இருந்தால் நல்ல வைத்துத்தான் கூற வேண்டும். நல்ல கிரகங்கள் இந்த வீட்டில் இருந்தால் நல்ல நண்பர்கள் கிடைப்பார்கள். பொதுவாக வாழ்க்கையில் என்ன மிச்சம் என்பதை இந்த வீட்டை வைத்துத்தான் கூற வேண்டும். 11-ம் வீட்டிற்குடைய கிரகம் 5-ம் வீட்டில் இருந்தால் புத்திரத்தால் லாபம் எனக் கொள்ளலாம். அதே 11-ம் வீட்டிற்குடைய கிரகம் 10-ல் இருந்தால் நல்ல ஜீவனம் எனக் கொள்ளலாம். அதே போல் 11-க்குடைய கிரகம் எந்த வீட்டில் இருந்தாலும் அந்த வீட்டிற்கு நல்லது எனக் கொள்ள வேண்டும்.
12-வது வீடு: இதை மோட்ச ஸ்தானம் என்று சொல்லுவார்கள். இதை விரய ஸ்தானம் என்றும் சொல்லுவார்கள். நமக்கு வரக்கூடிய செலவுகள், நஷ்டங்கள் எல்லாவற்றையும் இந்த வீட்டை வைத்தே சொல்லவேண்டும். துன்பம், பாவங்கள், வறுமை, துரதிஷ்டம், ஆகியவையும் இந்த வீட்டை வைத்தே சொல்ல வேண்டும். மறைமுக எதிரிகளையும் இந்த வீட்டை வைத்தே சொல்ல வேண்டும். ஒருவருக்கு ஜெயில் வாசம், உள்ளதா அல்லது இல்லையா என்பதையும் இந்த வீட்டை வைத்துத்தான் கூறவேண்டும். கடனைத் திருப்பிக் கொடுத்தலையும், முதலீடு செய்வதையும் இந்த வீட்டை வைத்துத்தான் கூற வேண்டும்.
மேஷ லக்னத்தில் பிறந்தவர்களுக்கு வரக்கூடிய வாழ்க்கைத் துணை அவர் பிறந்த இடத்தில் இருந்து தெற்கு அல்லது மேற்கு திசையிலிருந்து வருவார். திருமணத்திற்கு பிறகு பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் - நல்ல குழந்தை பாக்கியம் - நல்ல வேலைவாய்ப்பு என்பது அமையும். வரக்கூடிய வாழ்க்கைத்துணை பொருளாதாரத்தை முன்னேற்றுவதற்கு உறுதுணையாக இருப்பார். பொதுவாக மேஷ லக்னத்தில் பிறந்தவர்கள் திருமணத் தடை நீங்க மகாலட்சுமி வழிபாடு செய்து வருவது நன்மையைக் கொடுக்கும்.
ரிஷப லக்னத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத் துணை, மேற்கு அல்லது வடக்கு திசையிலிருந்து வருவார். வரக்கூடிய வாழ்க்கை துணை சிறிது பிடிவாத குணமும் எடுத்த கொள்கையில் மாறாதவர்களாகவும் இருப்பார்கள். சிறிது புத்திக்கூர்மையுடன் திகழ்வார்கள். இவர்களுக்கு திருமணத்திற்குப் பிறகுதான் சொந்த வீடு - மனை - வாகன வசதி - பூமி லாபம் என்பது ஏற்படும். திருமணத்திற்கு பிறகு பொருளாதாரத்தில் சிறிது முன்னேற்றம் காணப்படும். இவர்களுடைய திருமணம் தடை பட்டால் இவர்கள் முருகனை வழிபடுவதன் மூலம் திருமணத் தடைகள் நீங்கும்.
மிதுன லக்னத்தில் பிறந்தவர்களுக்கு வரக்கூடிய வாழ்க்கைத் துணை தெய்வ நம்பிக்கை கொண்டவர்களாகவும் - பழைமையான விஷயங்களின் மீது அதிக நம்பிக்கை கொண்டவர்களாகவும் இருப்பார்கள். வடக்கு மற்றும் கிழக்கு திசையிலிருந்து இவர்களுக்கு வாழ்க்கை துணை வரக்கூடிய வாய்ப்பு இருக்கிறது. அதிக சிக்கனம் கொண்ட இந்த லக்னகாரர்களுக்கு வரக்கூடிய வாழ்க்கைத் துணை - வாழ்க்கை முழுவதுமே மிகுந்த ஒத்துழைப்பை கொடுப்பார். இந்த லக்னத்தில் பிறந்தவர்களுக்கு குழந்தைகள் பிறந்த பிறகு தான் பொருளாதாரத்தில் நல்ல சிறப்பான முன்னேற்றம் என்பது ஏற்படும். இவர்கள் சிவபெருமான் மற்றும் அம்மனை வணங்கி வருவதன் மூலம் திருமணத்தடைகள் அகலும்.
கடக லக்னத்தில் பிறந்தவர்களுக்கு வரக்கூடிய வாழ்க்கைத்துணை கிழக்கு மற்றும் தெற்கு திசையில் இருந்து வருவார். வழக்காடுவதில் வல்லவர்களாக வாழ்க்கைத் துணை அமைவார்கள். கொண்ட கொள்கையில் மாறாதவர்களாகவும் இருப்பார்கள். இந்த லக்னத்தில் பிறந்தவர்களுக்கு திருமணத்திற்குப் பிறகுதான் தொழில் மிக மிகச் சிறப்பாக அமையும். திருமணம் தடைபட்டால் இவர்கள் விநாயகர் வழிபாடு செய்து வருவது மிகுந்த நன்மையைக் கொடுக்கும்.
சிம்ம லக்னத்தில் பிறந்தவர்களுக்கு வரக்கூடிய வாழ்க்கைத் துணை தெற்கு மற்றும் மேற்கு திசையிலிருந்து வருவார்கள். கடும் உழைப்பாளிகள் வாழ்க்கைத் துணையாக வருவார்கள். எந்த ஒரு கடினமான வேலைகளையும் புன்சிரிப்போடு செய்யக்கூடியவர்களாக இவர்களுக்கு வரக்கூடிய வாழ்க்கைத் துணை திகழ்வார். இவர்களுக்கு பிறக்கக்கூடிய குழந்தைகள் அதிக ஞானம் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்களது திருமணம் தடைபட்டால் குலதெய்வத்தையும் காவல் தெய்வத்தையும் வணங்கி வருவது நன்மையைக் கொடுக்கும்.
கன்னி லக்னத்தில் பிறந்தவர்களுக்கு வரக்கூடிய வாழ்க்கைத் துணை மிகுந்த தியாக மனப்பான்மை கொண்டவர்களாக இருப்பார். எந்த ஒரு கடினமான சூழ்நிலையிலும் மற்றவர்களுக்கு உதவி செய்யக் கூடியவராக இருப்பார். பொருளாதாரம் சம்பந்தமான விஷயத்தில் இவர்களுக்கு திருமணத்திற்குப் பிறகுதான் மிகுந்த யோகம் என்பது வந்து சேரும். மேற்கு மற்றும் வடக்கு திசையிலிருந்து இவர்களுக்கு வாழ்க்கை துணை அமையும். திருமணம் தடைபட்டால் இவர்கள் முருகனை வழிபாடு செய்து வருவது நன்மையை கொடுக்கும்.
துலா லக்னத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத் துணை கிழக்கு மற்றும் வடக்கு திசையிலிருந்து வருவார். மிகுந்த தைரியசாலியாகவும் - மனதில் பட்டதை உடனடியாக வெளியில் சொல்லக் கூடியவர்களாகவும் - தீர்க்கமான கொள்கை கொண்டவர்களாகவும் - எந்த ஒரு விஷயத்திலும் தீர ஆலோசித்து முடிவு எடுப்பவராகவும் வாழ்க்கைத்துணை இருப்பார். வரக்கூடிய வாழ்க்கைத் துணை குடும்பம் சம்பந்தமான விஷயங்களில் எந்த ஒரு முடிவிலும் இவர்கள் வாழ்க்கை துணையிடம் அடங்கிப் போவது சிறந்தது. பூமி லாபம் - வாகனம் ஆகியவை திருமணத்திற்குப் பிறகு ஏற்படும். இவர்கள் திருமணம் தடைபட்டால் சிவபெருமான் வழிபாடும் முருகன் வழிபாடும் செய்வது மிகுந்த நன்மையை கொடுக்கும்.
விருச்சிக லக்னத்தில் பிறந்தவர்களுக்கு வரக்கூடிய வாழ்க்கைத்துணை கிழக்கு மற்றும் தெற்கு திசையில் இருந்து வருவார். பெரியவர்கள் சொல்படி கேட்டு நடக்கக்கூடிய வாழ்க்கைத் துணை இவர்களுக்கு அமையும். எந்த ஒரு கடினமான சூழ்நிலையிலும் பெரியவர்களிடமும் - நண்பர்களிடமும் - உறவினர்களிடமும் கலந்து ஆலோசித்து முடிவெடுக்கக் கூடிய திறன் படைத்தவர்களாக இருப்பார்கள். முடிந்தவரை விட்டுக் கொடுத்து செல்லக்கூடிய வாழ்க்கைத் துணை அமையும். பொருளாதாரத்தில் மிகப்பெரிய நல்ல லாபம் என்பது திருமணத்திற்குப் பிறகு ஏற்படும். திருமணம் தடைபட்டால் சிவபெருமானையும் பெருமாளையும் வணங்குங்கள். நன்மை வந்து சேரும்.
தனுசு லக்னத்தில் பிறந்தவர்களுக்கு வரக்கூடிய வாழ்க்கைத் துணை மிகுந்த புத்திக் கூர்மை கொண்டவர்களாகவும் - சாமர்த்தியம் உடையவர்களாகவும் இருப்பார்கள். தெற்கு மற்றும் மேற்கில் இருந்து வரக்கூடிய வாழ்க்கைத் துணை இவர்களுக்கு அமையும். இவர்களுக்கு வாழ்க்கைத் துணை மூலமாக மிகப் பெரிய நன்மைகள் வந்து சேரும். வாழ்வில் மிகப்பெரிய மாற்றங்கள் என்பது நிச்சயமான முறையில் ஏற்படும். இவர்கள் திருமணம் தடைபட்டால் இவர்கள் சித்தர்களையும் பெருமாளையும் வணங்கி வருவது மிகப் பெரிய நன்மையை கொடுக்கும்.
மகர லக்னத்தில் பிறந்தவர்களுக்கு வரக்கூடிய வாழ்க்கைத் துணை மிகவும் அழகாக இருப்பார். வாழ்க்கைத் துணையின் முகம் வட்டமாக இருக்கும். வடக்கு மற்றும் மேற்கு திசையிலிருந்து வாழ்க்கைத் துணை அமையும். இவர்களுடைய வாழ்வில் மிகப்பெரிய மாற்றம் என்பது திருமணத்திற்குப் பிறகு அதிசயமான முறையில் வந்து சேரும். எந்த ஒரு முடிவு எடுப்பதாக இருந்தாலும் வாழ்க்கைத்துணையுடன் கலந்து ஆலோசித்து அதன் பிறகு முடிவெடுப்பது நன்மையைக் கொடுக்கும். இவர்களுடைய திருமணம் தடைபட்டால் அம்மனை வழிபாடு செய்து வருவது நன்மையை கொடுக்கும்.
கும்ப லக்னத்தில் பிறந்தவர்களுக்கு வரக்கூடிய வாழ்க்கைத்துணை கிழக்கு மற்றும் வடக்கு திசையிலிருந்து வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். இவர்களுடைய வாழ்க்கைத் துணை சற்று உயரமாகவும் - எடுத்த முடிவுகளில் மாறாதவராகவும் - தன்னம்பிக்கை அதிகம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள். அடுத்தவர்களுக்கு புத்திமதி சொல்லக்கூடிய அளவிற்கு தங்களை உணர்ந்தவர்களாக இருப்பார்கள். இவர்களுடைய திருமணம் தடைப்பட்டால், சிவபெருமானையும் முருகனையும் வணங்கி வருவது நன்மையைக் கொடுக்கும்.
மீன லக்னத்தில் பிறந்தவர்களுக்கு வரக்கூடிய வாழ்க்கைத் துணை கிழக்கு மற்றும் தெற்கிலிருந்து வருவார். தியாக மனப்பான்மை கொண்ட மீன லக்னக்காரர்களுக்கு வாழ்க்கைத்துணை வந்த பிறகுதான் வாழ்வில் வசந்தம் என்பது ஏற்படும். இவர்களுக்கு வரக்கூடிய வாழ்க்கைத் துணை நுண்ணறிவு உடையவர்களாகவும் - சிக்கனம் அதிகம் கொண்டவர்களாகவும் இருப்பார். இந்த லக்கினகாரர்களுக்கு திருமணம் தடைப்பட்டால் குல தெய்வத்தையும் திருச்செந்தூர் முருகனையும் வணங்கி வருவது மிகுந்த நன்மையைக் கொடுக்கும்.
மேஷம் 2 ஆம் இடமாக இருந்தால் ஜாதகர் செல்வச் சீமானாகவும், மாடு கன்று உள்ளவராகவும், பாகியவானவாகவும், வித்வானாகவும் விளங்குவார். மேஷம் மூன்றாம் பாவமானால் படிப்பாளி, பரோபகாரி, சுகசரீரம் உள்ளவன். நான்காம் பாவம் மேஷமானால் கால்நடைகளாலும், பெண்களாலும், நல்லுனர்வுகளாலும், பராக்கிரமதால் சம்பாதிக்கப் பெற்ற போகங்களாலும் சுகத்தை அடைகின்றான். ஐந்தாம் இடம் மேஷமானால் பிரியமான புத்திரன் அமைகிறான். தேவதையின் அருள் கிடைக்கிறது. குடும்ப சொத்தை வாரிசாக பெரும் அமைப்பு உண்டு. மேஷம் ஆறாம் இடமானால் தெளிவான சிந்தனை, பகைவர்களை அழித்தல், செய்யும் காரியங்களில் வெற்றி, கன்று, மாடு, தனம், சேர்கை, செல்வாக்குப் பெறுதல் ஆகிய அமைப்புகளை ஜாதகர் பெறுவார். மேஷ ராசி ஏழாம் இடமானால் அவனது மனைவி சபல புதியுள்ளவளாகவும் பணத்திலேயே நாட்டமுடையவளாகவும் கெட்டவர்களின் நட்பை நாடுபாவளாகவும், கொடுமையாய் நடந்து கொள்ள கூடியவளாகவும் அமைவாள். மேஷம் எட்டாம் இடமாக இருக்கப் பிறந்த ஜாதகன் நிறைய செல்வம் உடையவனாக இருப்பினும், மிகுதியான துன்பத்தை வாழ்க்கை முழுவதும் சந்திக்க நேரிடுகின்றது. வேறு தேசத்திலேயே இவனுக்கு மரணம் ஏற்படுகிறது. மேஷம் ஒன்பதாம் இடமானால் நாற்கால் பிராணிகளின் விருத்தி; அவற்றை காப்பாற்றுவான்; தானம் செய்வான். மேச ராசி பத்தாம் பாவமாக அமையுமானால் அதில் பிறந்த ஜாதகன் தொழிலில் சிறந்தவன். துப்பு கண்டு பிடிப்பதில் வல்லவன், அரசாங்க பணியில் ஈடுபடுபவன், மகிழ்ச்சி மிக்கவன். சாதுக்களின் கோபத்திற்கு ஆளாகுபவன். மேஷம் பதினொன்றாமிடமாக அமைந்தால் நாற்கால் பிராணிகளால் லாபமும், அரசாங்கத்தினால் அனுகூலமும், வெளி நாட்டுத் தொடர்பினால் லாபமும் செய்வான். மேஷம் பன்னிரெண்டாம் இடமாக இருந்தால் ஜாதகன் அதிகச் செலவினாலும், சரீர நல குறைவினாலும் பாதிக்கப் படுவான். அதிகமாக தூங்குபவனாகவும் ஆவான்.
ரிஷபம் 2 ஆம் இடமாக வருமானால் விவசாயத்தில் ஈடுபாடும் ரத்தினங்கள் வாங்குவதில் விருப்பம் உள்ளவராகவும் இருப்பார். ரிசபம் மூன்றாம் பாவமானால் புகழ் பெற்றவன். வள்ளல். அரச செல்வாக்கு உள்ளவன். நான்காம் பாவம் ரிஷபமானால் ராஜ சேவையினாலும் நியம நோன்புகளாலும், வெகுமதிகளாலும் சுகத்தை அடைகின்றான். ஐந்தாம் இடம் ரிஷபமானால் நல்ல அழகுள்ள பெண்கள் பிறப்பார்கள். இவள் கணவனுக்கு ஏற்ற மனைவியாய் அமைந்தாலும் சந்ததி இருக்காது. ரிஷபம் ஆறாம் இடமானால் கால் கால்நடைகள் விஷயத்தில் எப்பொழுதும் சண்டை, தன் மக்களாலும், மக்கள் வர்க்கத்தாலும் அடிக்கடி சண்டை ஏற்படும். பெண்களின் செர்கையாலும் உறவினர்களாலும் மகிழ்ச்சி உண்டு. ரிஷப ராசி ஏழாமிடமானால் அவனது மனைவி அடங்கி பேசுபவளாகவும், வணக்கமுள்ளவளாகவும், பதி விரதையாகவும் தெய்வ வழிபாடு உள்ளவளாகவும் விளங்குவான். ரிஷபம் எட்டாம் இடமாக இருக்கப் பிறந்த ஜாதகன்தரையில் ஊர்கின்ற அல்லது படுகின்ற ஜந்துக்கள், நாற்கால் பிராணிகள், துஷ்ட ஜனங்கள் மூலம் பெரும்பாலும் இரவு நேரத்தில் மரணம் எய்துகின்றான். ரிஷபம் ஒன்பதாம் இடமாக அமைந்தால் ஆடை அணிமணிகள் சேரும்; அதிகமாக பேசக்கூடியவன்; சாஸ்திரங்களில் சொல்லியவாறு தான தர்மங்களை செய்யக் கூடியவன். ரிஷப ராசி பத்தாம் பாவமாக அமையுமானால் செலவாளி, பெரியோர்களை சாதுக்களை பூஜிப்பவன். ஞானம் மிக்கவன். ரிஷபம் பதினொன்றாமிடமாக அமைந்தால் அதிகாரிகளினால் லாபமும், கோடுக்கல்-வாங்கலினால் பொருள் வரவும், ஸ்திரச் சொத்துக்களினால் லாபமும் செய்வான். ரிஷபம் பன்னிரெண்டாம் இடமாக இருந்தால் உயர்ந்த ஜாதிக் காளைகளினால் பொருளின் வரவும், பெண்களின் மூலம் பொருளின் லாபமும் ஏற்படும். நல்ல அறிவாற்றலினால் சாஸ்திரங்களில் ஆழ்ந்த ஈடுபாடும். ஏற்படும். பண்டிதர்களுடன் அறிவு பூர்வமான சர்ச்சை நடத்த எப்போதுமே தயாராக இருப்பார்.
மிதுனம் 2 ஆம் இடமாக ஆகுமானால் தனவான். இவனுக்கு பெண் பிள்ளைகள் அதிகம் பிறக்க வாய்ப்பு உண்டு. நண்பர்கள்ளல் லாபம் உள்ளவர். மிதுனம் மூன்றாம் இடமானால் வாகன சுகம் உள்ளவன். பெண்களிடத்தில் பிரியமாக நடப்பவன். அரசர்களின் நேசம் உடையவன். நான்காம் பாவம் மிதுனமானால் காடுகள், நீர் நிறைந்த பகுதிகளில் வாழ்க்கை அமையும். பெண்களால் லாபம் அடையக் கூடியவன்; நல்ல பணியாளர் அமைவர். ஐந்தாம் இடம் மிதுனமானால் அழகுள்ள குழந்தைகள் பிறப்பார்கள். கலைத்துறையில் வளர்ச்சி பெறுவார்கள். இசைத்துறையில் பரிமளிப்பார்கள். மிதுனம் ஆறாம் இடமானால் எப்பொழுதும் பெண்களால் வம்பு சண்டை விரோதம் இருக்கும்.. பலருடைய பாபத்திற்கு ஆளாக நேரிடும். இருபினும் வியாபாரத்தில் தொடர்புடையவர்களாலும், தாழ்ந்த ஜனங்களின் சிநேகிதத்தாலும் நன்மை உண்டு. மிதுன ராசி ஏழாமிடம் ஆனால் மனைவி செல்வமும் அழகும் நன்னடத்தையும் உள்ளவளாகவும் இருப்பாள். மிதுனம் எட்டாம் இடமாக இருக்கப் பிறந்த ஜாதகன் தனக்கு இளையவனாலோ, மூலம் முதலிய ரோகத்தாலோ, கவனக் குறைவாலோ மரணம் எய்துகின்றான். மிதுனம் ஒன்பதாம் இடமாக உள்ள ஜாதகன் துயரப் படுபவர்களுக்கு உதவி செய்யும் மனப்பான்மை உடையவன். வீட்டிற்கு வந்த பெரியோர்களை உபசரித்து அனுப்புவதில் விருப்பமுடையவன். மிதுனம் பத்தாம் இடமாக அமைந்தால் காரியத்தில் கான்னாயிருப்பவன். மந்திரங்கள் அறிந்தவன். மக்களின் மத்தியில் செல்வாக்கு உடையவன். தேகப்போலிவுடையவன். மிதுனம் பதினொன்றாமிடமாக அமைந்தால் ஜாதகன் பெண்களினால் அதிகம் கவரப்பட்டவனாகவும், புகழுடன் எல்லா சுகத்தையும் அனுபவிப்பவனாகவும் ஆவான். மிதுனம் பன்னிரெண்டாம் இடமாக இருந்தால் பெண்களினால் அதிகமான பொருளை இழப்பர். கெட்ட பழக்கம், கெட்ட நடத்தை உடையவர். தகாத முறையில் பொருளை செலவழிப்பர்.
கடகம் 2 ஆம் இடமாக அமைந்தால் நியாயமான மார்கத்தில் சம்பாதிப்பவர். மனைவி மூலம் சுகத்தை அடைபவர். பிள்ளைகளை பேணி காப்பவர். கடகம் மூன்றாம் இடமாகும் போது நற்குணங்கள் வாய்க்கப் பெற்றவனாகவும், விவசாயத்தில் ஈடுபாடு உள்ளவனாகவுன் அமைகின்றான். நான்காம் பாவம் கடகமானால் அழகன், பாக்கியவான், ஒழுக்க சீலன்; கலைகளில் ஈடுபாடு கொண்டவன். ஐந்தாம் இடம் கடகமானால் சாந்த சுபாவமுள்ள குழந்தைகளை ஜாதகர் அடைவார். காமுகனாக ஆண் பிள்ளை அமையவும் கூடும். கடகம் ஆறாம் இடமானால் சகோதர்களும், புத்திரர்களும் அதிகம் உடையவன்; வைதீகத்தில் சிறந்தவர்களுடன் நட்பு கொண்டவனாக இருந்தாலும் பொதுமக்களுக்கு விரோதியாக அமைகின்றான். கடகம் ஏழாமிடமாக அமைந்தால் மனைவி கணவனது மனதிற்குப் பிடிதவளாகவும் அவனுடைய சொல்லை தட்டாதவளாகவும் அழகுள்ளவளாகவும் அமைவாள். கடகம் எட்டாம் இடமாக இருக்கப் பிறந்த ஜாதகன் புழுவினாலோ, பயங்கரமான விஷ ஜந்துக்கலாலோ, பகைவர்களினாலோ, நீர் நிலைகளில் இறங்கும் போதோ மரணம் ஏற்ப்படுகின்றது. இந்த மரணம் பெரும்பாலும் வேறு தேசத்திலேயே அமைகின்றது. கடகம் ஒன்பதாம் இடமாக அமைந்த ஜாதகன் வனங்களில் சென்று கடுமையான தவம் செய்யும் பெரு பெறுகின்றான்; புண்ணிய தீர்த்தங்களில் நீராடும் வாய்ப்பு கிடைக்கிறது. விரதம் உபவாசம் தான தர்மம் இவனது இலட்சியங்கள். கடகம் பத்தாம் பாவமாக அமையுமானால் தண்ணீர்ப் பந்தல், பூந்தோட்டம் முதலியவற்றை அமைத்தல், குளம் வெட்டுதல் போன்ற தர்ம காரியங்களில் ஈடுபடுவான். கடகம் பதினொன்றாமிடமாக அமைந்தால் ஜாதகன் சாஸ்திரங்களில் சொல்லியவாறு தான தர்மங்களைச் செய்வான். சிறந்த கவிஞன் ஆவான். பூமி மூலம் பொருள் அனுபவிப்பான். கடகம் பன்னிரெண்டாம் இடமாக இருந்தால் அந்தணர்கள், பெரியோர்கள், நற்காரியங்கள் ஆகியவற்றில் ஈடுபாடுள்ளவன். மேலும் பெரியோர்களின் புகழ் பாடுவான்.
சிம்மம் 2 ஆம் இடமானால் நிறைய பொருள் ஈட்டுவார். எல்லோருக்கும் உபகாரியாக இருப்பார். சிம்மம் மூன்றாம் வீடாகும் போது ஜாதகன் பிறரின் பணத்தில் ஆசைவுள்ளவனாகவும் துஷ்டனாகவும் ஆகின்றான். நான்காம் பாவம் சிம்மானால் அதிக கோபத்தால் பலரின் நட்பை இழந்தவன். பெண் குழந்தையே பிறக்கும். கெட்டவர்களின் செர்கையுடயவன். ஐந்தாம் இடம் சிம்மம் ஆனால் குரூர குணம், மாமிச பிரீதி, நேர்மையற்ற போக்கு, அதிகப்பசி, வேற்றுதேசம் போதல் ஆகிய குணங்களையுடைய பிள்ளைகளே பிறப்பார்கள். சிம்மம் ஆறாம் இடமானால் தனது மகளுடன் தீராத விரோதம் உடையவன், பந்து ஜனங்களுடன் அவ்வாறே சண்டை சச்சரவு உடையவன். பொருள் வரவு நிறைய இருந்தாலும் அவை வந்த வழி தெரியாமல் செல்வதும் இந்த அமைப்பின் பலனாகும். வரவும் செலவும் பெரும்பாலும் பெண்களால் ஏற்படக் கூடியது என்பது குறிப்பிடத்தக்கது. சிம்மம் ஏழாமிடம் ஆனால் மனைவி எதிலும் தீவிரமானவளாகவும், தைரியமுள்ளவளாகவும் கடுங்குரல் படைத்தவளாகவும் ஓயாமல் பிறரின் வீடு சுற்றுபவளாகவும் இருப்பாள். இளைத்த சரீரமும் ஒரு சில குழந்தைகளும் உடையவள். சிம்மம் எட்டாம் இடமாக இருக்கப் பிறந்த ஜாதகன் பெரும்பாலும் வனத்தில் சாவை சந்திக்கின்றான். அது திருடரின் மூலமாகவோ நாற்கால் பிராணிகளின் மூலமாகவோ, பாம்பினாலோ ஏற்படக் கூடும். குழந்டையினால் கூட இவனுக்கு சாவு நேரிடலாம். சிம்மம் ஒன்பதாம் இடமாக ஆனால் ஜாதகன் தயை தாட்சண்யம் அற்றவன் ஆகின்றான்.இதனால் இவனது செல்வம் நாளடைவில் தேய்ந்து போகின்றது. பிள்ளை செல்வம் பறி போகின்றது. சிம்மம் பத்தாம் பாவமாக அமையுமானால் ஜாதகன் எல்லா பாவங்களையும் செய்யதக்க கொடூரமுள்ளவனாகின்றான். பொருளை கடத்தல், நாடு விட்டு நாடு செல்லுதல் ஆகிய மறைமுகமான தொளில்களில் துணிச்சலுடன் ஈடுபடுவான். கொலை செய்யவும் அஞ்சாதவன். சிம்மம் பதினொன்றாமிடமாக அமைந்தால் பிறரை துன்புறுத்துவான். யாரையும் மகிழ்ச்சியாக வைத்திருக்க மாட்டான். இருபிடக்தை மாற்றுவதால் அதிகமான துக்கத்தை அடைவான். சிம்மம் பன்னிரெண்டாம் இடமாக இருந்தால் அதிகமான விரோதிகளால் தாக்கப்படுவர். உடல் நிலை பாதிப்பினால் பீடையை அடைவார். கெட்ட காரியத்திலும் திருட்டுத் தொழிலும் ஈடுபாடு உடையவர்.
கன்னி 2 ஆம் இடமானால் அரசினால் வருமானம். யானை, குதிரை ரத்தினங்கள் முதலியவற்றை வேகுமானமாகப் பெறுவார். கன்னி மூன்றாம் இடமாக அமைந்த ஜாதகன் சாஸ்திரத்தில் பற்று உள்ளவனாகவும், ஒழுக சீலனாகவும் விருந்தோம்பல் பண்பாடு கொண்டவனாகவும் அற்பரின் சிநேகம் கொண்டவனாகின்றான். நான்காம் பாவம் கண்ணியானால் துர்புத்தியுள்ளவன்; திருடன், சண்டைக்காரன், கொள் சொல்லுபவன்; துப்பறியவல்லவன். ஐந்தாம் இடம் கன்னியானால் பெண் குழந்தையே பிறக்கும். அப்பெண்ணுக்கு சந்ததி இருக்காது. ஆனாலும் கணவனிடத்தில் அன்பும் புண்ணிய நோக்கும்.ஆபரணங்களில் விருப்பம் உடையவள். கன்னி ஆறாம் இடமானால் ஜாதகன் சாதுக்களிடதிலோ தர்ம காரியங்களிலோ ஈடுபாடு கொள்வதில்லை. மாறாக அவற்றில் வெறுப்பு கொள்ளவும்.செய்கின்றான். வீட்டிலும் வெளியிலும் எப்பொழுதும் இவனுக்கு எதிரிகள் இருப்பர்கள். கன்னி ஏழாமிடம் ஆனால் மனைவி அழகுள்ளவள்; அனால் புத்திரன் அற்றவள்; சௌபாக்கியம் நிறைந்தவள்; இன்சொல் பேசுபவள்; சாமர்த்தியசாலி; சத்தியமே லட்சியமாக கொண்டவள். கன்னி எட்டாம் இடமாக இருக்கப் பிறந்த ஜாதகன் விளையாட்டினாலும், பித்த சம்பந்த மான நோய்களினாலும் மரணம் அடையலாம். தனது சொந்த குடும்பத்து பெண்ணாலேயே கூடக் கொல்லப்படலாம். கன்னி ஒன்பதாம் இடமாக அமையப் பிறந்த ஜாதகன், உண்மையான பக்தி செலுத்த மாட்டான். தான் மேன்மை அடைய வேண்டுமென்பதில் அதிகம் நாட்ட முடையவன். கன்னி பத்தாம் இடமானால் ஜாதகன் எப்போதும் முட்டாள்களின் நண்பனாகவே ஊர் சுற்றித் திரிவான். பெரும்பாலும் பெண்களுடைய சொத்துக்கு மேலாளராக இடம்பிடித்து, தானும் சொத்து சேர்த்துக் கொள்ளும் வல்லவனாகின்றான். கன்னி பதினொன்றாமிடமாக அமைந்தால் ஜாதகன் அதிகம் பேசக்கூடியவன். பிறரை ஏமாற்றுபவன். கெட்ட தொழிலை செய்து பொருள் சம்பாதிப்பவன். கன்னி பன்னிரெண்டாம் இடமாக இருந்தால் ஜாதகன் பெண்களுடன் தகாத முறையில் தொடர்பு உள்ளவன். சுப காரியத்தில் ஈடுபடுதலும், அழகுப் பொருள்களின் மூலமும், நல்லவர்களின் சேர்கை மூலமும் பொருளை இழப்பான்.
துலாம் 2 ஆம் இடமானால் பூமியினாலும, பயிர்களினாலும், தன்முயற்சியினாலும் பொருளீட்டிப் பல நற்காரியங்களுக்கு பயன் படுத்துவார். துலாம் மூன்றாமிடமாக அமைந்தால் வெறுக்கத்தக்க சுபாவம் கொண்டவனாகவும் அற்பரின் சிநேகம் கொண்டவனாகவும் ஆகின்றான். நான்காம் பாவம் துலாராசியானால் சுபகாரியங்களை முன்னின்று நடத்துபவன். கல்வி கலைவல்லோன். தெளிந்த சித்தமும் செல்வமும் வாய்ந்தவன். ஐந்தாம் இடம் துலாம் ராசியானால் ஒழுக்கம் அழகு கம்பீரமான கவர்ச்சிப் பார்வையுடைய பிள்ளைகள் பிறப்பார்கள் துலாம் ஆறாம் இடமானால் தன் முதலாளியோடு முரன்பாடு கொள்பவர்கள். கெட்ட நடத்தையுள்ள பெண்களாலும் சொந்த மனைவியாலும் எப்பொழுதும் தொல்லை இருக்கும். துலாம் ஏழாமிடம் ஆனால் மனைவி தோற்றப் பொலிவில்லாதவள்; தர்மம் செய்வதில் நாட்டம் உடையவள்; பெருத்த சரீரம் உள்ளவள்; குழந்தை செல்வம் மிக்கவள். துலாம் எட்டாம் இடமாக இருக்கப் பிறந்த ஜாதகன் மருந்தின் மூலம் அல்லது நாற்கால் பிராணிகளின் மூலம், பெரும்பாலும் இரவு நேரத்தில் மரணம் அடைகின்றான். உபவாசம் அல்லது உண்ணாவிரதம் இருப்பதினால் கூட உயர் பிரியக் கூடும். பிறரது வஞ்சனையினாலும் இந்த ஜாதகருக்கு சாவு நேரிடலாம். துலாம் ஒன்பதாம் இடமாக உள்ள ஜாதகன் பிரசித்தி பெற்றவன்; பெரியோர்களை மகிழ்விப்பதிலும், பொதுமக்கள் நட்பை பெறுவதிலும் ஆர்வமிக்கவன். துலாம் பத்தாம் இடமாக அமைந்தால் பல்வேறு தொழில்களில் ஈடுபடுகின்றான். நேர்மையுடையவன். சாதுக்களுக்கு பிடித்தமானவன்.பல தர்ம காரியங்களில் ஈடுபட்டு மேலான பதத்தை அடையக்கூடிய பாக்கியம் பெற்றவன். துலாம் பதினொன்றாமிடமாக அமைந்தால் நண்பர்களின் மூலம் பொருளின் வரவை அடைவான். நல்லவர்களை வணங்குவான். அதிகமான புகழையும் அடைவான். துலாம் பன்னிரெண்டாம் இடமாக இருந்தால் ஜாதகன் பெரியோர்களிடமும் நல்லவர்களிடமும் ஈடுபாடு உள்ளவன். சாஸ்திரத்தை காப்பாற்றுவான். புலனடகத்திலும் அதிகமான யாத்திரையிலும் ஈடுபடுவான்.
விருசிகம் 2 ஆம் இடமானால் கடமையே கண்ணாக உள்ளவர். பெண்களிடத்தில் பிரியமுள்ளவர். நல்ல பேச்சாளர். பிராமணர்களிடமும், தெய்வங்களிடமும் ஈடுபாடு கொண்டவர். விருச்சிகம் மூன்றாமிடமாக அமைந்தவனுக்கு செய்நன்றி மறந்த பாபர்களும், செலவு செய்வதையே குறியாக கொண்டவர்களும், வம்பிளழுப்பவர்களும் சேர்ந்து விரோதத்தை விளைவிப்பவர்கள். நான்காம் பாவம் விருசிகமானால் கொடுமையான சுபாவமுள்ளவன். கோழை; சாமர்தியமற்றவன். ஐந்தாம் இடம் விருசிகமானால் தோசமின்மை, நல்ல தோற்றம் தர்மத்தில் பற்று, நல்ல நட்புடைய பிள்ளைகள் வாய்க்கும். விருசிகம் ஆறாம் இடமானால் பிராமணர்களுக்கு எதிரியாவான். பலவிதமான பாம்புகளால் இவன் அவதிப்பட நேரிடும். மதம் பிடித்த யானைகளாலும் ஜாதகனுக்கு தொந்தரவு ஏற்படும். திருடர்கள் இவனுடைய பொருளை அபகரித்து செல்வர்.குதிரை முதலிய வாகனங்களால் சில சமயங்களில் பீடை ஏற்ப்படும். பெண்களாலும் தொல்லைகள் உண்டு. விருச்சிகம் ஏழாமிடம் ஆனால் மனைவி தயையும் அன்பும் கொண்டவள்; எதிலுமே தீவிர முயற்சி கொண்டு ஒரே தடவையில் காரியம் சாதிக்க வல்லவள்; கணவனிடத்தில் பிரியம் வைக்காதவள்; துர்பாக்கியமும், தோஷமும் நிறைந்தவள். விருசிகம் எட்டாம் இடமாக இருக்கப் பிறந்த ஜாதகன் முகத்தில் உண்டான ரோகதினாலோ, புழுக்களால் உண்டான ரோகதினாலோ, தனது குலத்தில் உதித்ததனாலோ மரணம் உண்டாகின்றது. விருசிகம் ஒன்பதாம் இடம் ஆனால் பிறரை துன்பப்படுத்துவான்.; யாரையும் மகிழ்ச்சியாக வைத்திருக்க மாட்டான். விருசிகம் பத்தாம் இடமானால் பிராமணர்கள் குருமார்கள், மேலோர் ஆகியவர்களை துன்புருத்துபவனாகின்றான். துஷ்டர்களுடைய சிநேகிதம் இவனுக்கு விருப்பமானதாகும். விருசிகம் பதினொன்றாமிடமாக அமைந்தால் சாஸ்திரங்களில் ஈடுபாடு உள்ளவன். அதிகமான புகழை அடைவான். பெரியோர்களை மகிழ்விப்பான். விருச்சிகம் பன்னிரெண்டாம் இடமாக இருந்தால் ஜாதகனுக்கு கவன குறைவினாலும் ஆடம்பர செலவினாலும் நஷ்டம் ஏற்படும். எதிரிகளின் எதிர்ப்புக்கு ஆளாவான்.
தனுசு 2 ஆம் இடமாக அமைந்தால் தீரச் செயல்களால் செல்வம் கிடைக்கும். மாடு கன்றுகள் வீட்டில் நிறைந்து இருக்கும். தர்ம காரியங்களின் மூலம் புகழ் பெறுவார். தனுசு மூன்றாமிடமாக அமைந்தவன் வீரர்கள், செல்வர்கள், தர்ம மார்க்கத்தில் இருபவர்களின் நட்பை அடைகின்றான். நான்காம் பாவம் தனுசானால் ராணுவத்தில் வேலை செய்பவன்; நல்ல சுபாவமுடையவன்; விஷ்னுவை வழிபடுபவன். ஐந்தாம் இடம் தனுசு ஆனால் கெட்டபுத்தி, பாபச்செயல், அதிர் நடை ஆகிய குணங்கள் கொண்ட பிள்ளைகள் பெற வேண்டிய நிலை ஏற்படும் தனுசு ஆறாம் இடமானால் வேடர்கள் வில்லேந்தியவர்கள், குதிரைகள், யானைகள் மற்றும் அசையும் பொருள்கள் அசையாப் பொருள்கள் ஆகியவற்றால் தொல்லைகள் இருந்து கொண்டிருக்கும். ஜாதகரை ஏமாற்றிப் பொருளை பறித்து செல்பவரும் உண்டு. தனுசு ஏழாமிடம் ஆனால் மனைவி பெண்மை தோற்றம் அற்றவள்; அதாவது கடும் குரலும் மிடுக்கான நடையும் கொண்டவள். நளினமும் நாணமும் இல்லாதவள்; ஆணின் குணாதிசியங்கள் அனைத்தும் கொண்டவள். பக்தியோ புத்தியோ இல்லாதவள். தனுசு எட்டாம் இடமாக இருக்கப் பிறந்த ஜாதகன் தன்னுடைய இருப்பிடத்தில் தன்னுடன் இருப்பவனால் மரணம் அடையலாம். புளுக்களாலும், நாற்கால் உயிரினங்களாலும் மரணம் ஏற்பட வாய்ப்பு உண்டு. தனுசு ஒன்பதாம் இடமாக அமையும் பொழுது அந்தணர்களுக்கு உபகாரியாகின்றான். எப்பொழுதுமே மகிழ்ச்சியாக இருப்பவன். புகழ் இவனை தேடி வருகின்றது. தனுசு பத்தாம் பாவமாக அமையுமானால் எப்பொழுதும் அடிமை தொழிலை செய்ய நேரிடுகின்றது. திருட்டும், பிறருக்கு தீங்கு செய்தலும் இவனுக்கு கை வந்த கலை. தனுசு பதினொன்றாமிடமாக அமைந்தால் அதிகாரிகளின் நன்மதிப்பை பெறுவான். தகாத காரியத்தை செய்வதினாலும், தகாத சேர்கையினாலும் பொருளின் லாபத்தை அடைவான். தனுசு பன்னிரெண்டாம் இடமாக இருந்தால் ஜாதகனுக்கு கேட்டவர்களாலும் ஏமாற்றுபவர்களாலும் செலவுன்டாகும். நன்றி மறப்பவர் மூலமும் பிறரை ஏமாற்றுவதன் மூலமும் பொருளை இழப்பர்,
மகரம் 2 ஆம் இடமாக ஆனால் பலவிதமான் யுக்திகளால் பொருளை ஈட்ட வல்லவர். பிற நாட்டு தொடர்பாலும் அரசு மூலமாகவும் செல்வம் சேரும். மகரம் மூன்றாம் இடமாக அமைந்தவனுக்கு எப்போதும் சுகம் கிடைக்கிறது. தெய்வ வழிபாடு; குருபக்தி; நிறைந்த செல்வம், ஒப்பற்ற பாண்டித்தியம் காரணமாக நல்ல குருமார்கள் அமைகிறார்கள். நான்காம் பாவம் மகரமானால் நீர்நிலை பகுதிகளில் வசிப்பவன். பிறருடைய தாகத்தை போக்கவல்ல தண்ணீர்ப் பந்தல் முதலியன வைப்பவன். காமகுனம் கொண்டவன். ஐந்தாம் இடம் மகரமானால் வேட்டையில் பிரியமும், பகைவரை ஒழித்துக் கட்டும் திறமையும், அரச சேவையில் ஈடுபாடும் உள்ள புத்திரர்கள் பிறப்பார்கள். மகரம் ஆறாம் இடமானால் கொடுக்கல் வாங்கல் மூலம் தகராறு, வீட்டு மனைகளின் மேல் தொல்லைகள், ச்நேகிதபகை ஏற்படும். சாதுக்கள் கூட இவனை நல்லவன் என கூற மாட்டார்கள். மகரம் ஏழாமிடம் ஆனால் மனைவி வெளியாருக்கு காருண்யம் மிகுந்தவள் போலக் காட்சியளிப்பவள். உள்ளத்தில் கஞ்சத்தனம் மிக்கவள். இவளுக்குப் பிறக்கும் பெண் குழந்தை நல்ல பெயரெடுக்கும். தன்னைப் பொறுத்த மட்டில் தனக்கும் கணவனுக்கும் தன் குழந்தைகளுக்கும் இனியவளாய் நடந்து கொள்பவள்; பதிவிரதை. மகரம் எட்டாம் இடமாக இருக்கப் பிறந்த ஜாதகன் நல்ல கல்விமான். மானம் மிக்கவன். வீரன். எல்லாக் கலைகளிலும் வல்லவன். ஆனாலும் பெண் பித்தன். ஆதலால் எதனாலும் இவனுக்கு சாவு வரக்கூடும் என்பதை இயல்பாகவே ஊகித்துக் கொள்ளலாம். மகர ராசி ஒன்பதாம் பாவமாக அமையப் பெற்றவன் பின்வயதில் தன் குலத்தவருக்கு உபகாரியாகின்றான். பெண்களிடம் வெறுப்பை அடைகின்றான். மகரம் பத்தாம் பாவமாக அமையுமானால் உறவினர்களுடன் அன்பு கொண்டவன். வித்வான்களை நேசிப்பவன். இருப்பினும் சில நேரங்களில் துஸ்டத்தனமான காரியங்களிலும் இவன் ஈடுபடக் கூடும். மகரம் பதினொன்றாமிடமாக அமைந்தால் அதிகமான தல யாத்திரை செய்வான். பராகிரமத்தினாலும், தர்மத்தினாலும் பெருமை அடைவான். கல்வியில் அதிகமான ஆற்றலும், பெரியோர்களுடனான சேர்கையில் விருப்பமும் உடையவன். மகரம் பன்னிரெண்டாம் இடமாக இருந்தால் ஜாதகர் அதிகமாக சாப்பிடுவார். புண்ணிய தீர்த்தங்களில் நீராடும் வாய்ப்பு கிட்டும். விரதம், உபவாசம் தான தர்மம் இவனது இலட்சியங்கள்.
கும்பம் 2 ஆம் இடமாக ஆனால் பழம், புஸ்பம் இவை மூலம் அதிகமான தனத்தை பெறுகின்றான். நல்லவர்கள் அனுபாவிக்க கூடிய பெரியோர்கள் மூலம் இவன் அனுபவிக்கின்றான். கும்பம் மூன்றாம் இடமாக பிறந்த மனிதன் பொறுமை, கீர்த்தி, சத்தியம் மிக்கவர்களோடு நண்பன் ஆகின்றான். சில சமயம் வஞ்சகர்களோடும் சிநேகம் கொள்ள நேரிடும். நான்காம் பாவம் கும்பமானால் பெண்ணால் செல்வசுகம் அடைபவன். நல்ல உணவுகளை ருசிப்பவன். துஷ்டனுக்கு உதவி செய்பவன். ஐந்தாம் இடம் கும்பமானால் கட்டுடல், தன தானிய சேர்கை, வெகு நல்ல குணமுடைய புத்திரன் கிடைக்கும். ஆனால் அவனுக்குப் பிறகும் பையன் இந்த பிள்ளைக்கு கெட்ட பெயரயே பிற்காலத்தில் தேடித் தருவான். கும்பம் ஆறாம் இடமானால் குளம் ஆறு முதலிய நீர் நிலைகளில் இறங்கி குளிக்கும் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தனக்கு ஆதரவாக இருக்கும் முதலாளியிடம் பகை ஏற்ப்படலாம். கும்பம் ஏழாமிடம் ஆனால் மனைவி எதிலும் உறுதியான உள்ளம் கொண்டவள்; கணவனுக்கு எப்போதும் தொண்டு செய்பவள்; தெய்வங்களிடத்திலும், பிராம்மணரிடத்திலும் முறையே பக்தியும் மரியாதையும் உள்ளவள். எல்லாவித சுகங்களும் அமையப் பெற்றவள். கும்பம் எட்டாம் இடமாக இருக்கப் பிறந்த ஜாதகன் நெருப்பினாலோ, தீய பெண்களின் சேர்க்கையினாலோ, பகைவனாலோ புண்பட்டு சாக நேரிடலாம். கும்பம் ஒன்பதாம் இடமானால் காடு வளர்த்தல் பூந்தோட்டம் அமைதல், குளம் வேட்டல், தெய்வங்களின் ஆராதனை ஆகிய காரியங்களில் ஈடுபடுகின்றான். கும்பம் பத்தாம் பாவமாக அமையுமானால் பிறரை ஏமாற்றிப் பிழைப்பவன். பயணம் செய்வதில் விருப்பம் உடையவன். தனக்கு ஒரு பொருள் தேவை என்றால் அதை எந்த வழியிலும் அடைந்தே தீர வேண்டும் என்று முரட்டுத் தனம் கொண்டவன். இதனால் சமுக விரோதியாகவும் இவன் மாறுவதற்கு இடம் உள்ளது. கும்பம் பதினொன்றாமிடமாக அமைந்தால் கடல் கடந்த வியாபாரத்தினால் லாபம் அடைவான். வெளிநாட்டு பிரயனதினால் செலவும் பெறுவான். கும்பம் பன்னிரெண்டாம் இடமாக இருந்தால் ஜாதகன் வனம் சென்று கடுமையான தவம் செய்யும் பேறு பெறுகின்றான். பெரியோர்களை உபசரித்து விருந்தோம்புதலில் அதிகமான பொருளை செலவளிப்பான்.
மீனம் 2 ஆம் இடமானால் நெம நிஸ்டைகள், உபவாசம் ஆகியவற்றால் தனம் கிடைக்கிறது. வித்தை மூலமாகவும், தாய் வழியாகவும், அரசு மூலமாகவும் பொருள் சேரும். புதையல் கிடைக்கும் வாய்ப்பும் உண்டு. மீனம் மூன்றாமிடமாகும் போது மிகுந்த செல்வம் நிறைய பிள்ளைகள் உடையவனாகின்றான். புண்ணியவான். அதிதிகளிடம் பிரியம் உள்ளவன். எல்லா ஜனங்களுக்கும் பிடிதவனுமாகின்றான். நான்காம் பாவம் மீனமானால் விசித்திர ஆடைகளை அணிபவன்; செல்வம் உள்ளவன். ஐந்தாம் இடம் மீனமானால் நோயற்ற வாழ்வு, நல்ல ரூபம், எப்பொழுதும் சிரித்த முகம், நகைச்சுவையான பேச்சுடன் கூடிய பிள்ளைகளை அடையும் யோகமுண்டு. மீனம் ஆறாம் இடமானால் தன் மக்களாலும் மனைவி மூலம் பிற உறவினர்களிடமும் பகை ஏற்படும். ஜாதகரும் அவர் தந்தையும் காலம் முழுவதும் ஒருவருக்கொருவர் எதிரிகளாகவே வாழ்வர் மீனம் ஏழாமிடம் ஆனால் மனைவி விகாரமான தோற்றமுடையவள். இவளுக்கு பிறக்கும் குழந்தைகள் கெட்ட புத்தியுடையன; நல்லொழுக்கம் அற்றன; எப்போதும் யாருடனாவது சண்டைக்குப் போய் வம்பை விலைக்கு வாங்கிக் கொண்டு வருவன. மீனம் எட்டாம் இடமாக இருக்கப் பிறந்த ஜாதகன் பித்த ஜுரத்தினாலோ, வாயு ஜுரத்தினாலோ அல்லது ஆயுதத்தாலோ சாக நேரிடலாம். மீனம் ஒன்பதாம் இடமாக அமைந்த ஜாதகன் கோயிற்பனிகள், நந்தவனம் அமைதல், யாகங்கள் செய்தல், புண்ய தீர்த்த யாத்திரைகள் இவற்றை மேற்கொள்கின்றான். மீனம் பத்தாம் இடம் ஆனால் தெய்வ வழிபாட்டில் சிந்தையை செலுத்தக் கூடியவன். குருபக்தி மிக்கவன். அதனால் குருவின் உபதேசம் பெற்று கீர்த்தி உடையவனாகின்றான். தர்ம காரியங்களில் பெரும்பாலும் நாட்டம் உடையவன் ஆகின்றான். மீனம் பதினொன்றாமிடமாக அமைந்தால் பலவழிகளிலும் ஜாதகன் லாபத்தை அடைவான். நண்பர்களினால் லாபம் பெறுவான். அழகாகப் பேசுவான். மீனம் பன்னிரெண்டாம் இடமாக இருந்தால் கடல் கடந்து பிரயாணம் செய்வான். தரக்குறைவான சேர்க்கையினால் பாதிக்கப் படுவான்.அதிகமான பொருளையும் இழப்பான்.
லக்னாதிபதி லக்னதிலேயே இருந்தால் நீண்ட ஆயுளுள்ளவர். எப்பொழுதும் சுகமான வாழ்வு அமைகிறது. நல்ல உழைப்பாளியகவும் இவர் விளங்குகின்றான். இவருக்கு இரண்டு மனைவிகள் அமைவதற்கு இடமிருக்கிறது. 2க்கு உடையவன் லக்னதிலிருந்தால் பணக்காரன் ஆனால் கருமி. சுயநலம் கொண்டவர். வியாபாரி, சுகஜீவி, அழகான புருஷ அமைப்பு கொண்டவர். 3க்கு உடையவன் லக்னதிலிருன்தால் பந்துகளின் இடையூருளால் இல்லற சுகத்தை அனுபவிக்க இயலாதவனாகின்றான். அடிமைத்தொழில். 4க்கு உடையவன் லக்னதிலிருந்தல் வியாதியற்ற, கவர்ச்சி மிக்க தோற்றம். வாகன சுகம். நல்ல பொருள்களின் லாபம். ஆகியன அமைகின்றன. 5 குடையவன் லக்னத்தில் இருந்தால் புதிரர்களினால் சுகம் பெறுவான். அந்தப் பிள்ளைகளில் யாருக்கேனும் மந்திரசித்தி கிடைக்கிறது. ராஜாங்க சேவை செய்யும் வாய்ப்பும் சாஸ்திரங்களை கற்றுக் கொள்ளும் போக்கும் உள்ள பிள்ளைகள் அமைகிறார்கள். விஷ்ணு பக்தி நிறைந்த பிள்ளை கிட்டவும் வாய்ப்பு இருக்கிறது. ஆறுக்குடையவன் லக்னத்தில் இருந்தால் நல்ல பலமுடையவன். பகைவர்கள் இவனை ஒன்றும் செய்ய முடியாது. மாடு கன்று வசதி உடையவன். ஆனாலும் சொந்தக்காரர்களால் துன்பத்திற்கு ஆளாவான். ஏழுக்குடையவன் லக்னத்தில் இருந்தால் ஜாதகன் துக்கம் அற்றவன்; சுகபோகி; ஒன்றுக்கு மேற்பட்ட மனைவியர் உடையவன்; சத்ருக்களை நாசம் செய்பவன். எட்டுக்குடையவன் லக்னத்தில் இருந்தால் துஷ்டர்களுடன் நட்புக் கொண்டு அதனால் துன்பத்தை ஏற்படுத்திக் கொள்பவன். நிரந்தர நோயாளி ஆனாலும் அரசிடமிருந்து வருமானத்தை அடையக் கூடியவன். லக்னத்தில் குரு ஒன்பதுக்கு உடையவனாகி இருந்தால் விநாயக வழிபாடு உள்ளவன். அரசாங்க வேலை செய்பவன். ஞாபக சக்தி நிறைந்தவன்; தூய்மையை நேசிப்பவன்; அதிகமாக உணவு உண்ணமாட்டான்; ஆனாலும் லோபி. பத்துக்குடையன் லக்னத்தில் இருந்தால் தாயினிடத்தில் அன்பு மிக்கவன். தந்தையிடத்தும் பக்தியுடையவன். சுகத்துடன் வாழ்பவன். பாபக்கிரகங்களுடன் கூடினால் துக்கம் உடையவன். துஷ்டன். தந்தைக்கு ஏமாற்றத்தை தருபவன். பதினொன்ருகுடையவன் லக்னத்தில் இருந்தால் நல்ல போருளுள்லவனாவான். தெளிவான புத்தி உள்ளவனாகவும் பிறரிடம் பிரியம் உள்ளவனாகவும் இருப்பான். நேர்மையான புத்திரனை அடைவான். அரசாங்கத்திலிருந்து ஆதரவு பெற்றவனாகவும் நல்ல சுபாவமுள்ளவனாகவும் இருப்பான். பன்னிரெண்டுக்கு உடையவன் மேஷத்தில் இருந்தால் அதிகச் செலவும் உடல் நலப்பாதிப்பும் இருக்கும். தூக்கத்தில் பிரியமுள்ளவன். சுபன் இருந்தால் ஜாதகன் லாபம் பெற்றவன் ஆவான்.
லக்னாதிபதி இரண்டாம் வீட்டில் இருந்தால் செழிப்பும் உயரமும் கொண்ட தேக அமைப்பு கிடைக்கிறது. தனவான், தர்மம் செய்பவர். ஒழுக்கம் உள்ளவர். மான உணர்வு மிக்கவர். 2க்கு உடையவன் இரண்டாம் வீட்டில் இருந்தால் அமைச்சராகும் அந்தஸ்து. பெரிய குடும்பம், நவமணிகளை அணிய கூடியவர். 3க்கு உடையவன் இரண்டாம் இடத்தில இருந்தால் பிச்சை எடுக்க நேரிடும். 4க்கு உடையவன் 2 ஆம் இடதிலிருந்தால் பாபக் கிரகங்களுடன் சேர்ந்திருந்தால் தந்தைக்கு விரோதியாகின்றான். சுபகிரகங்களுடன் சேர்ந்திருந்தால் தந்தைக்கு நலம். பக்திமான். ஸ்ருதி சாஸ்திர பண்டிதன். 5 குடையவன் இரண்டாமிடதில் இருந்தால் பிறக்கும் பிள்ளை குடும்ப விரோதி, தீயோரின் சேர்கை உள்ளவன். ஆறுக்குடையவன் இரண்டாம் வீட்டில் இருந்தால் கெட்டிகாரன். கொடூர வார்த்தைகள் பேசுவான்.செல்வம் சேர்ப்பதில் திறமைசாலி. பலருக்கு மத்தியில் புகழோடு வாழக் கூடியவன். இருப்பினும் மனதை வீணாகக் குழப்பிக் கொள்பவன். அடிகடி வரும் நோயினால் உடல் இளைத்தவன். ஏழுக்குடையவன் 2 ஆம் இடத்தில் இருந்தால் ஜாதகனின் மனைவி துஷ்டத்தனம் மிக்கவள்; சுகமற்றவள்; பித்த சம்பந்தபட்ட வியாதிகளால் பீடிக்கப்படுபவள்; எதற்கெடுத்தாலும் கணவனோடு எதிர்வாதமிடுபவள்; கணவனின் சொல்லை மீறி நடப்பவள்; தனக்கென குழந்தை பேறு இல்லாதவள்; எட்டுக்குடையவன் இரண்டிலிருந்தால் இவனது ஜீவனம் அதாவது தொழில் நிலை அடிக்கடி மாறிக் கொண்டே போகும். சாஸ்திரங்கள் பல கற்றவராயினும் திருட்டுத்தனம் இவனை விட்டுப் போவதில்லை. பாபக்கிரகங்களுடன் கூடினால் சுபமற்றவனாகவும், வியாதி உள்ளவனாகவும் நாளைக் கழிக்க வேண்டி உள்ளது. ராஜ தண்டனையும் இவன் அடையக் கூடும். ஒன்பதுக்கு உடையவன் இரண்டாம் இடத்திலிருந்தால் ஜாதகன் மண உறுதி வாய்ந்தவன்; நல்லொழுக்கமுள்ள புத்திரனை உடையவன்; கால்நடைகளால் ஆபத்து நேரலாம்; செலவுள்ளவன்; பெண் பித்தன். பத்துக்குடையன் இரண்டாம் இடத்தில் சுப கிரகங்களுடன் கூடி இருந்தால் தாய் தந்தையரை சுகத்துடன் வைத்திருப்பான்.கடின வார்த்தை பேசுபவன்.திடகாத்திரமான சரீரம் உள்ளவன். தனவான். பதினொன்ருகுடையவன் இரண்டாம் இடத்தில் இருந்தால் ஜாதகனுக்கு நிலையற்ற வாழ்கையும் சுகக்குறைவும் இருக்கும். நீண்ட ஆயுளையும் அடைவான். பன்னிரெண்டுக்கு உடையவன் ரிஷபத்தில் இருந்தால் சிறந்த காளைகளினால் லாபமும், சிறந்த பெண்களால் லாபமும் உண்டு. சாஸ்திர சம்பதமான செய்திகளை பற்றி விவாதம் செய்வார். இதனால் வித்வான்களுடன் தொடர்பு வரும்.
லக்னாதிபதி மூன்றான் இடத்தில இருந்தால் சகோதரர்களின் சகாயம் அவருக்கு எப்போதும் உண்டு. சிங்கத்திற்கு ஒப்பான பராகிரமம் உள்ளவர். சகல சௌபாக்கியங்களையும் பெற்றவர். 2க்கு உடையவன் மூன்றாம் இடதிலிருந்தால் துஷ்டன்; அதே சமயம் பயம் உள்ளவன். சகோதர்களுக்கு எதிரி. 3க்கு உடையவன் மூன்றாமிடதிலேயே இருந்தால் பிறரை நண்பனாக்கி கொள்வதில் சமர்த்தன்; குருவிடம் பற்றும் ராஜ சேவையும் மேலான் தனமும் உடையவன். 4க்கு உடையவன் 3 ஆம் இடதிளிருந்தால் தந்தைக்கு ஆதரவாளன். ஆனால் தாயுடன் சண்டையிடுபவன். வேளாண்மையால் விருத்தியடைவான். நண்பர்களை மிகுதியாககொண்டவன். 5 குடையவன் மூன்றாம் இடத்தில இருந்தால் பிறகும் பிள்ளை பராக்கிரமசாலி, வாக்கு சாதூர்யம் நிறைந்தவன். சாந்த குணம். சுகபோகி. ஆறுக்குடையவன் மூன்றாம் பாவத்தில் இருந்தால் வஞ்சனை உள்ளவர்களிடம் கூடியிருபவன். பல தொழில் செய்பவன். தகப்பனார் தேடி வைத்த சொத்துகளை நாசம் செய்பவன். அதிகமான கோபமுடையவன். இருபினும் உடனே கோபம் தணிந்து சாந்த நிலைக்கு வரக்கூடியவன். ஏழுக்குடையவன் 3 ஆம் இடத்தில் அமர்ந்தால் ஜாதகன் தன் சொந்த முயற்ச்சியை நம்பி வாழ்பவன்; பந்துகளிடத்தில் அன்பு உள்ளவன். எட்டுக்குடையவன் மூன்றாம் இடத்தில் இருந்தால் கூடப் பிறந்தவனுடன் ஒத்துப் போகாது. நண்பர்களே நாளடைவில் விரோதிகளாக மாறுவர். இவனுடைய சபல புத்தியும் கடுமையான வார்த்தை பேசும் தன்மையும் துஷ்டத்தனமும், பந்து ஜனங்களிலிருந்து இவனை வெகு தூரம் விலக்கி விடுகிறது. ஒன்பதுக்கு உடையவன் மூன்றாம் இடத்திலிருந்தால் அழகன். மக்களின் மத்தியில் செல்வாக்கு உடையவன். தன்னை சேர்ந்தவர்களையும் உறவினர்களையும் பேணிக் காப்பவன். புகழுக்குரிய செயல்களை செய்பவன். சுகஜீவி. பத்துக்குடையன் மூன்றாம் இடத்தில இருந்தால் உறவினர்களுக்கும் பெற்ற தாய்க்கும் விரோதியகின்றான். பெரும்பாலும் அடிமை தொழில் செய்பவன். பதினொன்ருகுடையவன் மூன்றாம் இடத்தில் இருந்தால் ஜாதகன் உடன் பிறப்பினாலும் உறவினர்களினாலும் பலவகையிலும் நன்மை அடைவான்.சிநேகிதர்களினாலும் பலவகையிலும் நன்மை அடைவான். ச்நேகிதர்களினால் நன்மை அடைவான். பன்னிரெண்டுக்கு உடையவன் மிதுனத்தில் இருந்தால் பெண்களின் மீது ஆசை வைத்து அதனால் அதிகமான பணவிரயம் செய்வார். பேய் பிசாசு முதலியவற்றின் மூலமாகவோ, கெட்ட குணத்தின் மூலமாகவோ செலவழிக்க கூடியவனாகின்றான்.
லக்னாதிபதி நான்காம் வீட்டிலிருக்கும் அமைப்பு பெற்றவர் அரசரால் போற்றப்படகூடிய அந்தஸ்தை பெறுகிறார். தெய்வ வழிபாடுடையவர். பெற்ற தாய் தந்தையரின் மகிசிக்காக எல்லா முயற்சிகளையும் மேற்கொள்ளுபவர். தர்ம ஸ்தாபனத்தில் தன்னை ஈடுபடுத்தி கொள்பவர்.அதக சகோதர்கள் உள்ளவர். வாகன யோகம் உள்ளவர். தேகசுகம் உள்ளவர். 2க்கு உடையவன் நாலமிடதிலிருந்தால் தாய் தந்தை இடம் தனம் பெறுபவர். ஆத்மா சக்தி உள்ளவர். நீண்ட ஆயுள். (இரண்டாமிடததிபன் இந்த வீட்டில் பாப கிரகமானால் ஏழையாகவும் நோயுள்ளவராகவும் இருப்பார்). 3க்கு உடையவன் நான்காம் இடத்தில இருந்தால் உறவினர்கள் இருந்தால் பித்தம்; வயிற்றில் சாஸ்திர சிகிச்சை; தாயுடன் சண்டை; தந்தையினுடைய பொருளை அழிப்பவன். 4க்கு உடையவன் 4 ஆம் இடத்திலிருந்தால் சுகானுபவத்தில் அரசனுக்கு ஒப்பாவான்; நல்ல புத்திர பாக்கியமுடையவன்; மக்களால் பாராட்டப் பெற்றவன். 5 குடையவன் நான்காம் இடத்தில இருந்தால் தந்தைக்கு அன்பன்; பெரியோர்களிடம் ஈடுபாடு. துணிவியாபாரம் லேவாதேவி நடத்தல் ஆகிய தொழிலில் இந்தப் பிள்ளை ஈடுபடுவான். ஆறுக்குடையவன் நான்காம் ராசியில் இருந்தால் தந்தையின் பக்கம் சேர்ந்து கொண்டு குடும்பத்திற்கு கலகம் விளைவிப்பன். தந்தையினாலும் மகனாலும் பொருள் வரவு உடையவன். உடல் வலிமை உள்ளவன். சபல உள்ளம் படைத்தவன்.எப்பொழுதும் சரீரத்தில் நோய் நலிவு உடையவன். ஏழுக்குடையவன் 4 ஆம் இடத்தில் இருந்தால் ஜாதகனை பலமற்றவனாகச் செய்து விடுகின்றான். தகப்பனாருக்கு இவன் விரோதமாகின்றான். எனவே துஷ்டன் என்று சொல்லத் தேவை இல்லை. ஆனால் இவனுக்கு வாய்க்கும் மனைவி நல்ல குணவதியாய், கணவனின் சொல்லுக்கு மறுவார்த்தை பேசாதவளாய் அழகு பொருந்தியவளாய் அமைகிறாள். எட்டுக்குடையவன் நான்காம் இடத்தில் இருக்கப் பிறந்தவன் தன் தந்தை திரட்டி வைத்த பொருள் அனைத்தையும் நாசம் செய்கின்றான். தனது புத்திரனளிடத்திலும் பகையை தேடிக் கொள்கிறான். வியாதி உள்ளவன். ஒன்பதுக்கு உடையவன் நான்காம் இடத்திலிருந்தால் வித்வான்களை நேசிப்பவன்; நண்பர்களை மிகுதியாக கொண்டவன். தந்தையை வழிபடுபவன். தீர்த்த யாத்திரையில் பற்று உள்ளவன். மிகுந்த செல்வம் உடையவன். பத்துக்குடையன் நான்காம் இடத்தில் இருந்தால் மிகுதியாக சுக போகங்களில் ஈடுபடகூடியவன். தாய் தந்தையரை நலமாக வைத்துக் காப்பவன். மனித சமுதாயம் நலம் பெற வேண்டும் என்ற பரந்த நோக்கம் உள்ளவன். அரச சன்மானம் பெறக் கூடியவன். பதினொன்ருகுடையவன் நாலாம் இடத்தில இருந்தால் ஜாதகன் அதிக ஆயுள் உள்ளவனாகின்றான். தகபனாரிடம் பணிவுள்ளவனாகவும் பிள்ளைகளிடம் பாசம் உள்ளவனாகவும் இருப்பான். நற்காரியங்களில் நல்ல பொருள் லாபத்தை அடைவான். பன்னிரெண்டுக்கு உடையவன் கடகத்தில் இருந்தால் பிராமணர்கள், தேவர்கள் ஆகியோர் வகையில் யாகம் முதலிய தர்ம காரியங்களை செய்வதாலும் செலவு ஏற்படும். நல்லவர்கள் இவரைப் பாராட்டிப் புகழ்வார்கள்.
லக்னாதிபதி 5 ஆம் இடத்தில இருக்கும் அமைப்பை பெற்றவர் நீண்டகாலம் வாழும் புத்திரர்களை உடையவர். சுபகாரியங்களுகாக பொருளை செலவிடகூடியவர். சங்கீத ஞானத்தில் பற்றுள்ளவர். பணிவும் அடக்கமும் இவரது பண்பு நலன்கள். பூர்வ புண்ணியம் வாய்க்கப்பெற்றவர். 2க்கு உடையவன் 5 ஆம்இடதிலிருந்தால் லோபி. துக்கமுள்ள்ளவர்; (பபகிரகமானால்) துஷ்டர். 3க்கு உடையவன் 5 ஆம் இடத்திலிருந்தால் உறவினர்கள் அதிகம், சுகவாசி; பிறருக்காக உதவி செய்பவன்; அழகிய சரீரம் உடையவன்; நீண்ட ஆயுள். 4க்கு உடையவன் 5 ஆம் இடத்தில இருந்தால் நீண்ட ஆயுள்; புத்திமான்; வேதப்பயிற்சி மிக்கவன். கையெழுத்தை கண்ணில் ஒற்றிக்கொள்ளலம். 5 குடையவன் 5 ஆம் இடத்தில் இருந்தால் பிள்ளை புத்திமான்; ஆற்றல் மிக்க பேச்சாளன்; சுருக்கமாக சொன்னால் புருஷ ஸ்ரேஷ்டன் ஆறுக்குடையவன் 5 ஆம் பாவத்தில் இருந்தால் தந்தையோடும் மக்களோடும் ஓயாமல் சண்டை இடுபவன். பாபக் கிரகங்களின் சேர்கை இருந்தால் இளம் புத்திரர்கள் சுபகிரக யோகமிருந்தால் யாவராலும் பாராட்டத் தகுந்தவனாகவும் செல்வம் மிக்கவனாகவும் திகழ்வான். ஏழுக்குடையவன் 5 ஆம் இடத்தில் இருந்தால் ஜாதகனுக்கு அழகு அந்தஸ்து, தலைமகன், சுகம் ஆகியவற்றை தருகின்றான். துஷ்டர்களை இந்த ஜாதகன் நாசம் செய்துவிடுவான். தன் பத்தினியை எந்த ஆபத்தில் இருந்தும் காப்பாற்ற கூடியவன். எட்டுக்குடையவன் ஐந்தாம் இடத்தில் இருக்கப் பிறந்தவனுக்கு குழந்தைகள் பிறந்து பிறந்து இறந்து போகலாம். தீயவர்களுக்கு தலைவனாகவும்.இருப்பான்.பாபக் கிரகங்கள் சேர்க்கையினாலோ பார்வையினாலோதான் இப்பலன் அமைகின்றது. ஒன்பதுக்கு உடையவன் ஐந்தாம் இடத்திலிருந்தால் தெய்வங்களிடமும், பிராமனர்களிடமும் பக்தியுடையவன்; நல்ல வனப்பு, புத்தி கூர்மை உடையவன். இன்சொல் பேசுபவன். பத்துக்குடையன் ஐந்தாம் இடத்தில் இருந்தால் கலை ஆர்வம் மிக்கவன். அரசால் ஆதாயம் பெறக் கூடியவன். மிகுந்த யோகி, சிறந்த சங்கீத மேதையாகவும் இவன் திகழக் கூடும். பதினொன்ருகுடையவன் ஐந்தாம் இடத்தில இருந்தால் செவிலித்தாயிடம் அன்புள்ளவனாவான். மிதமாக சாப்பிடுபவனாகவும் சுகபோகத்தில் ஆர்வமுள்ளவனாவும் இருப்பான். மேற்கண்ட பலன்கள் ஐந்துக்குடையவன் சுபனானால் பொருந்தும். பன்னிரெண்டுக்கு உடையவன் சிம்மத்தில் இருந்தால் அதிகமாக விரோதங்கள் வியாதியினால் உடல் நலம் பாதிப்பு, கெட்ட காரியத்தில் ஈடுபாடு இருக்கும். கல்வியால் செலவு ஏற்படும். திருடனாக மாறுவதும் உண்டு.
லக்னாதிபதி 6 ஆம் இடத்தில இருக்கும் அமைப்பு கொண்டவருக்கு எப்போதும் பகைவர்களின் தொல்லை உண்டு.சுப குணம் இவர் உடன் பிறந்தது.தாய் மூலம் சௌகர்யத்தை தேடிகொள்பவர். தாய் மாமனின் உதவியும் இவருக்கு உண்டு. மாடு கன்று வைத்து வாழ்பவர். லக்னாதிபதி 6ஆம் இடத்தில இருபது அவ்வளவு நல்ல பலன்களை உண்டாக்காது. 2க்கு உடையவன் ஆறாம் இடத்தில சுபகிரகங்கள் சேர்ந்திருக்க பிறந்தவரானால் சத்ருவை நாசம் செய்பவர். பணம் சேர்பதில் சமர்த்தர். பபக்ராகங்களுடன் இருந்தால் வஞ்சகர். தரித்திரர்; கெட்ட சகவாசம் உள்ளவர். 3க்கு உடையவன் 6 ஆம் இடத்தில் இருந்தால் கண்ணில் ஏதாவது கோளாறு; சத்ருக்கள் நிறைந்தவன்; சகோதரர்களாகவும், விளங்குகளாலும், வியாதிகளாலும் சாதுக்களாலும் துன்பத்தை அடைவான். 4க்கு உடையவன் 6 ஆம் இடத்திலிருந்தால் பகைவர்கள் மிகுதி; தாய் மாமனால் வஞ்சிகப்படுவார். சுபகிரகங்களுடன் சேர்ந்திருந்தால் சுகவாசி. 5 குடையவன் 6 ஆம் இடத்தில இருந்தால் மிகுந்த தோஷமுள்ள பிள்ளை பிறப்பான். ஆறுக்குடையவன் ஆறாம் பாவத்திலேயே இருந்தால் சொந்த ஊரில் சுகமுடையவன் மக்கட்பேற்றில் பிரியமுடையவன்கஞ்சன் துஷ்டன் சிநேகிதம் உடையவன். அவர்களால் தொல்லையையும் சந்திக்க கூடியவன். ஏழுக்குடையவன் 6 ஆம் இடத்தில் இருந்தால் ஜாதகனுக்கு அற்ப ஆயுள்; அபமிருத்யு பீடைகள்; பல ஆபத்துகளைச் சந்திக்க நேரிடும்; அழகிய கட்டுடல் கொண்டவன்; பெண்களிடத்தில் பிரியமுள்ளவன்; பாபக்கிரகங்கள் அந்தஇடத்தில சேர்ந்திருந்தால் க்ஷயரோகி. எட்டுக்குடையவன் ஆறாம் இடத்தில் இருந்து, சூரியன் செவ்வாய் சேர்க்கையும் அமைந்தால் வீண் சண்டைக்குச் செல்பவன். புதன், சந்திரனுடன் கூடி ஆறிலிருந்தாலும் தானாக விரோதத்தை தேடிக் கொள்வான். சந்திரன், சனி இவர்களோடு கூடியிருந்தால் தீராத நோயாளியாக வாழ்க்கை அமைகின்றது. ஒன்பதுக்கு உடையவன் ஆறாம் இடத்திலிருந்தால் ஜாதகனுக்கு பகைவர்கள் அதிகமாகின்றனர். உடல் உறுப்பு ஏதேனும் பாதிப்பு உள்ளாகும். விகாரமான பார்வை உடையவன்; துஷ்டன்; பலரும் இவனை தூற்றுவர். பத்துக்குடையன் ஆறாம் இடத்தில் இருந்தால் அரசுப் பகையை தேடிக் கொள்வான். காமம் மிக்கவன். எல்லோரிடத்திலும் எப்போதும் சண்டை இடுபவன். திருடர்களுக்கு மத்தியில் இவன் ஜீவனம் சிறப்பாக அமையும். பதினொன்ருகுடையவன் ஆறாம் இடத்தில் இருந்தால் ஜாதகனுக்குஎதிரிகள் உண்டு. ரோகத்தினாலும் பீடிக்கப்படுவான். இளைத்து மெல்லிய தேகமாக தென்பட்டாலும் சாமர்த்தியதிற்கு குறைவிருக்காது. வெளி தேசங்களிலும் பிரயாணம் செய்வான். பன்னிரெண்டுக்கு உடையவன் கண்ணியில் இருந்தால் பெண்களோடு விசித்திரமான விளையாட்டுகளை விளையாடுபவன். கல்யாணம் முதலிய மங்களகரமான காரியத்தின் மூலமும், சோபையை தருகின்ற பொருளின் வழியிலும், சாதுகளின் வழியிலும் செலவு செய்பவனாயிருப்பன்.
லக்னாதிபதி களத்திர ராசியான் 7 ஆம் இடத்தில இருந்தால் பெண்கள் மூலம் சுகம், செல்வம் இவற்றை அடைவார். ஒழுக சீலர். அலங்கார பிரியர். ஆனாலும் இவரது மனைவி நெடு நாள் வாழ்வது சந்தேகமே. ஒரு கட்டத்தில் இவர் விரக்தியடைந்து வேறு தேசம் செல்லவும் நேரிடலாம். 2க்கு உடையவன் 7 ஆம் இடதிலிருந்தால் நல்ல ரூபம் உள்ளவர். மனைவியை அதிகமாக நேசிப்பவர்; நிறைய புத்திரப் பெரு உள்ளவர்.பாப கிரகத்துடன் கூடி இருந்தால் குழந்தை அற்றவர். 3க்கு உடையவன் 7 ஆம் இடத்தில இருந்தால் பெண்களிடம் சண்டை இடுபவன்; மனைவி நல்ல அழகுடன் அமைந்தவராயினும் வேறு ஸ்திரீயின் பாவம் நிறைந்த வீட்டை நாடிசெல்வான். 4க்கு உடையவன் 7 ஆம் இடத்திலிருந்தால் தேவர்களுக்கு ஒப்பான அழகிய வடிவம் அமைந்தவர். பெண்களுக்கு பிடித்தமானவர். பாபகிரகங்கலிருந்தால் மிக வஞ்சகன்; கொடியோன் 5 குடையவன் ஏழாம் இடத்தில இருந்தால் ஜாதகருடைய பத்தினி உறவினர்களுடன் அன்பு கொண்டவளாகவும், ஒழுக்கமுள்ளவளாகவும், சிறுத்த இடையுள்ளவளாகவும் அமைந்து நல்ல புத்திரர்களை பெறுகின்றான். ஆறுக்குடையவன் 7 ஆம் பாவத்தில் இருந்தால், பாவக் கிரகத்துடன் சேர்ந்திருந்தால் எதற்க்கெடுத்தாலும் வாதம் செய்கிறவன். பெண் பித்தன். பகையினால் விஷத்தையும் தருபவன். சுபகிரகங்களுடன் சேர்ந்திருந்தால் நல்ல அழகு மிக்க மக்களை உடையவன். ஏழுக்குடையவன் 7 ஆம் இடத்தில் இருந்தால் நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும் கிட்டுகிறது. நீண்ட ஆயுள்; இன் சொல்லன்; சாந்த சோரூபி; கீர்த்திமான்; ஆனாலும் இவனிடத்தில் ஒரு கெட்டகுனம்-பிற பெண்டிரை மொஹித்தல். எட்டுக்குடையவன் ஏழாம் இடத்தில் இருந்தால் மறைவிடங்களில் ரோகம் உள்ளவன். கஞ்சன், துஷ்டன், கெட்ட நடத்தை உள்ளவன். பாபக் கிரகங்கள் கூடினால் பெண்களுடன் வெகுவாகச் சண்டை போடுவான். செவ்வாயுடன் கூடினால் இந்நிலை மாறி சாந்தமுள்ளவனாகின்றான். ஒன்பதுக்கு உடையவன் ஏழாம் இடத்திலிருந்தால் பெண் சுகம் உள்ளவன். மனைவி செல்வ வளம் மிக்கவள்; கணவன் சொல் தவறாதவள்; அழகி. பத்துக்குடையன் ஏழாம் இடத்தில் இருந்தால் நல்ல அழகன்; பெண்களிடத்தில் எப்போதும் பிரியமாக நடந்து கொள்வான். இவனது மகனாலும், இவன் தந்தையின் அன்புக்குரிய பிற ஸ்திரியாலும் நலம் பெறுவான். பதினொன்ருகுடையவன் ஏழாம் இடத்தில இருந்தால் ஜாதகன் இயற்கையிலேயே கொடூர உடலமைப்பை கொண்டவனாக இருப்பான். அதிக வசதியுள்ள செல்வந்தனாவான். நீண்ட ஆயுளைக் கொண்டவனாவான். நல்ல குணங்களை கொண்டவனாக திகழ்வான். பன்னிரெண்டுக்கு உடையவன் துலாத்தில் இருந்தால் பிராமணர்கள், தேவர்களுக்கு உறவினன் ஆவான். வேத சாஸ்திரப்படி விரதங்கள் திருப்பணிகள் நடக்க செலவு செய்வான். இந்திரியங்களை அடக்கி புண்ணிய தலங்களுக்கு யாத்திரை செய்து மிக்க புகழ் பெற்றவனாக விளங்குவான்.
லக்னாதிபதி எட்டாம் இடத்தில இருக்கப்பெற்றவர் பற்பல துன்பத்திற்கு ஆளாகிறார். மரணத்திற்கு ஒப்பான உபாதை ஏற்படுகிறது. எவ்வளவு பாடுபட்டாலும் செல்வம் இவரிடம் சேராது. எப்பொழுதும் யாரோடும் வாதிட்டு கொண்டே இருபதால் ஒரு சமயத்தில், திருடராகவும், பிறர் மனைவியிடத்தில் நாட்டமுள்ளவராகவும், கொடுமையாளராகவும் மாற வாய்ப்புள்ளது. 2க்கு உடையவன் எட்டாம் இடத்திலிருந்தால் வாயு சரீரம்; நல்ல எண்ணமுடையவர். 3க்கு உடையவன் எட்டாம் இடத்திலிருந்து பாபகிரகங்களும் சேர்ந்திருந்தாலும் ஜாதகன் மிகுந்த கோபம் உடையவனாகவும் இறந்து போன சகோதரன் பந்துக்களுடைய குடும்பத்தில் பிறந்த்வானாகவும் இருப்பான் 4க்கு உடையவன் 8 ஆம் இடத்திலிருந்தால் சுபகிரகங்கள் கூடினால் நோயுள்ளவன். தாய் தந்தையரும் சுகமடையார். பாபக் கிரகங்களிருந்தால் அதிகச் செளவாளி. அதனால் செல்வம் யாவும் தொலைத்து விட்டுத் தெருவில் நிற்பான். 5 குடையவன் எட்டாம்மிடதிலிருந்தால் அங்கத்தில் ஈனம் ஏற்படும் பிள்ளை தோன்றுவான். கோபம், கெட்ட பேச்சு, கெட்ட நடத்தை, வஞ்சகம், தரித்திரம் ஆகியவை இவன் கூட பிறந்த குணங்கள். ஆறுக்குடையவன் எட்டாம் பாவத்தில் இருந்தால் வயிற்றுக் கோளாறினாலோ, விஷத்தினாலோ மரணம் அடைவான்.ஆறுக்குடையவன் சூரியனாகி எட்டில் இருந்தால் அரசனாவான், சந்திரனாகி எட்டில் இருந்தால் அற்ப ஆயுள். திடீர் மரணம் ஏற்படும், குருவாகவோ, சுக்ரனாகவோ அமைந்து எட்டில் இருந்தால் கண் மூலம் ஆபத்து நேரிடும். ஏழுக்குடையவன் 8 ஆம் இடத்தில் இருப்பின் தன் மனைவியோடு ஓயாமல் சண்டை வளர்பவன்; ஆதலால் மனைவிச் சுகமற்றவன்; மனைவியோடு தப்பித்தவறி மகிழ்ச்சியோடு இருக்க முற்பட்டாலும், பாவம் அவளூக்கு விரைவில் மரணம் வந்து சேர்கிறது. எட்டுக்குடையவன் எட்டாம் இடத்திலேயே இருந்தால் பயிர் தொழில் செய்யக் கூடியவனாக இருப்பான். நோயாளி. பிறரை வஞ்சித்து கொடுமை செய்வான். ஒன்பதுக்கு உடையவன் எட்டாம் இடத்திலிருந்தால் ஜாதகன் தோற்றம் விகாரமாக இருக்கும்; பிறரை ஏமாற்றுபவன்; கெட்ட நட்புடையவன்; அலி. பத்துக்குடையன் எட்டாம் இடத்தில் இருக்கப் பிறந்தவன் மிக்க ஏமாற்றத்தை தரும் பொய் வார்த்தை பேசுபவன். கபடம் உள்ளவன். திருட்டு வித்தையில் சமர்த்தன். தந்தைக்கு இடைவிடாமல் தொல்லை தருபவன். பதினொன்ருகுடையவன் எட்டாம் இடத்தில இருந்தால் ஜாதகன் அதிக வியதியஸ்தனாக இருப்பான். எதிரிகளின் மூலம் அதிகமான விரோதத்தை உண்டாக்குபவனாகவும் இருப்பான். பன்னிரெண்டுக்கு உடையவன் விருசிகத்தில் இருந்தால் கவன்குறையுள்ளவன், பிறரை அணுகுவான். ஆடம்பரத்திற்காக செலவு செய்பவன்,.தீய நண்பர்களின் உதவியால் நன்மை செய்தவர்களையே அதிகமாக நிந்திப்பான். ஏசுவான். திருடர்கள் சம்மன்ந்தபட்ட தொழிலை மேற்கொண்டு பொருளை செலவளிப்பான்.
லக்னாதிபதி 9 ஆம் இடத்தில் இருந்தால் எல்லோரிடமும் சரளமாக பழகி நல்ல நட்பை தேடிகொள்வார். தானும் வாழ்ந்து பிறரையும் வாழ வைப்பார். பெரும்புகழ் பெறுவார். அரசர்களும் பணியகூடிய அந்தஸ்தை பெறக்கூடியவர். பேச்சாற்றல் மிக்கவர். இல்லறத்தை நல்லறமாக்குபவர். திருமாலை வழிபடுபவர். 2க்கு உடையவன் ஒன்பதாம் இடதிளிருண்தால் கொடையாளி; பலம் உள்ளவர்; விரத அனுஷ்டானம் உள்ளவர். பாப கிரகத்துடன் கூடினால் தாழ்ந்த்தவர்; தரித்திரர். 3க்கு உடையவன் ஒன்பதாம் இடத்தில் இருந்தால் இளமையான தோற்றம்; சோலைகள் சூழ்ந்த பகுதிகளில் வாழவேண்டும் என்ற விருப்பம் உள்ளவனாகவும், நல்ல விசயங்களில் புத்தியை செலுத்துபாவனாகவும் இருப்பான். 4க்கு உடையவன் 9 ஆம் இடத்திலிருந்தால் தகப்பனால் சொத்து சுகங்கள் பெறுவான்; உயர்ந்த நண்பனின் உதவி கிடைக்கும். கிணறு குளம் முதலியவற்றை அமைத்து கொடுத்து பொது ஜனங்களிடையே தர்மவானாகிறான். பொறுமையை விரதமாக மேற்கொள்பவன்; அழகிய விழிகள்; அயல் நாடு சென்று தங்கி சுகம் பெரும் யோகமும் உண்டு. 5 குடையவன் ஒன்பதாம் இடத்திலிருந்தால் ஜாதகருடைய புத்திரன் சண்டையை தீர்த்து சமாதானப் படுத்தி வைப்பதில் சமர்த்தன். அரசனால் தரப்பட்ட வாகனம் உள்ளவன்; கலை வல்லவன். ஆறுக்குடையவன் 9 ஆம் பாவத்தில் பகை கிரகங்களுடன் சேர்ந்திருந்தால் கால்களுக்குப் பங்கம் ஏற்படும். புத்திரன் இருக்க மாட்டான். செல்வம் சேராது. எந்த விதமான சுகமும் இராது. ஏழுக்குடையவன் 9 ஆம் இடத்தில இருந்தால் ஜாதகன் நல்லொழுக்கம் உடையவன். பாபக்கிரகங்கள் அந்த இடத்தில் செர்கையானால் நபும்சகன்; மனைவியை பகையாளியாக கருதுபவன்; தவத்தில் நாட்டமுடையவானாகி சந்நியாசியாகி போவதும் உண்டு. எட்டுக்குடையவன் ஒன்பதாம் இடத்தில் இருந்தால் பிறரை இம்சிப்பவன், இவனுக்கு நண்பர்களே அமைய மாட்டார்கள். காலப்போக்கில் எல்லோராலும் விலகப் பட்டவனாகின்றான். ஒன்பதுக்கு உடையவன் ஒன்பதாம் இடத்திலேயே இருந்தால் பொது மக்களிடம் கெட்ட பெயர் எடுப்பவன். குருகளிடமும் , உறவினர்களிடமும் பற்றுள்ளவன்; சுத்தமாக இருப்பான். பத்துக்குடையன் ஒன்பதாம் இடதில் இருந்தால் தொழிலில் விருத்தி உள்ளவன். தோற்றப் பொலிவு கொண்டவன். அன்பான் சகோதர்களும், நண்பர்களும் நிறைந்தவன். பராக்கிரமம் மிக்கவன். உண்மையில் நாட்டம் உடையவன். பதினொன்ருகுடையவன் ஒன்பதாம் இடத்தில் இருந்தால் அதிக வேதங்களை கற்றவனாக திகழ்வான். சாஸ்திரங்களில் தேர்ச்சிப் பெற்ற கெட்டிகாரனாயிருப்பான். தர்மத்தினால் புகழ் பெற்றவனாகவும், குருக்கள் தேவர்கள் இவர்களிடம் பக்தி உள்ளவனாகவும் இருப்பான். பாபியானால் உறவினர் இல்லாதிருப்பான். பன்னிரெண்டுக்கு உடையவன் தனுசு இருந்தால் பலவிதமான விஞ்சனைகளாலும், கெட்டவரோடு சேர்வதாலும் செலவழிப்பன். செய்நன்றி மறந்தவன். பிறரை ஏமாறுபவன்.
லக்னதிபாதி 10 ல் அமர்ந்தால் அரசர்கொப்பான வாழ்க்கை உடையவர். குரு பூஜை செய்பவர். தாயும் தந்தையும் போற்ற வாழ்பவர். சகல சுகமும் பெற்றவர். நோயில்லாமல் நிறை வாழ்வு வாழ்பவர். 2க்கு உடையவன் 10 ஆம் இடதில் இருந்தால்அரசு தொடர்பு, தாய் தந்தையரிடம் பக்தி, சுகஜீவி, அழகன், பாபர் இருந்தால் பெற்றோருக்கு இவரே எதிரி. 3க்கு உடையவன் 1௦ ஆம் இடத்தில் இருந்தால் தகப்பன் வழியிலும் அரச வழியிலும் சுகம் உண்டாகும். தூய்மையே விரும்புவான். 4க்கு உடையவன் 10 ஆம் இடத்திலிருந்தால் மனைவி யோகமுடையவன்; தாய் தந்தையருக்கு நீண்ட ஆயுள் வாய்க்கிறது; அந்த வகையில் லாபமுடையவன். 5 குடையவன் பத்தாம் இடத்தில இருந்தால் அரசுப் பணியுடன் பற்பல வகைகளிலும் போருலீடுபவன். பெண்களிடம் பிரியமுள்ளவன். ஆறுக்குடையவன் 10 ஆம் பாவத்தில் இருந்தால் பெற்ற தாயுடன் ஓயாமல் வழக்காடுவான். சபல புத்தி உள்ளவன். துஷ்டன், சுபகிரகங்களுடன் கூடினால் தம்மை வைத்து காப்பாற்றக் கூடிய மகனை பெறுவான்.தன் தந்தைக்கு எதிரியாக இருந்தாலும் தாயை காப்பாற்றுவான்.. ஏழுக்குடையவன் 1௦ ஆம் இடத்தில் அமரும் போது ஜாதகன் ராஜ சம்பந்தமான குற்றத்தை செய்பவன் ஆகின்றான். கெட்ட வார்த்தைகளை பேசுபவனாகவும், கபடியாகவும், சபல புத்தி உடையவனாகவும் ஆகின்றான் மாமனாரை வேலை வாங்குபவன்; வஞ்சகன்; சொந்த ஜனங்களுக்கு உதவி செய்யாதவன். பெண்களுக்கு சந்தோசத்தை தராதவன். எட்டுக்குடையவன் பத்தாம் இடத்தில் இருந்தால்அரசாங்கத்தில் வேலை பார்க்கக் கூடும். சோர்வும் துக்கமும் இவனை விட்டு நீங்காது. ஒன்பதுக்கு உடையவன் பத்தாம் இடத்திலிருந்தால் அரசாங்க பணி செய்பவன், புண்ணிய காரியங்களில் ஈடுபடுபவன். தாயிடம் பக்தியுள்ளவன், புகழ் படைத்தவன். பத்துக்குடையன் பத்தாம் இடத்திலேயே இருந்தால் தந்தையை சுகமாக வைத்திருப்பவன். சாமர்த்தியசாலி. புகழ் மிக்கவன். அரசு வருமானத்தை சன்மானங்களை அடையக் கூடியவன். பதினொன்ருகுடையவன் பத்தாம் இடத்தில் இருந்தால் தந்தையை மதியாதவன்; தாயாருக்கு வேண்டியவன். அதிக தனம், செல்வாக்கு , புகழ் கொண்டவனாக இருப்பான். தாயைப் பரிபாலிக்கும் காரியத்தில் விருப்பமுடையவன். பன்னிரெண்டுக்கு உடையவன் மகரத்தில் இருந்தால் குடி சாப்பாடு வகை செலவு செய்வான். தன் உறவினர்களை மதித்து வணங்காதவன். மிடமாக உண்பான். பிறரால் நிந்திக்கப் பட்டவன். பயிர் தொழில் அற்றவனாவான்.
லக்னாதிபதி 11 ஆம் இடத்தில இருந்தால். தெளிவான் சிந்தனையும் நிறைவான் வாழ்வும், அமைப்பான வாகன சுகமும், அரச மரியாதையும் பெறுவார். 2க்கு உடையவன் 11 ஆம் இடதிலிருந்தால் லட்சமி கடாச்சம் பொருந்தியவர். அமைச்சர் பதவிக்கு நிகரான பதவி வகிப்பவர். 3க்கு உடையவன் 11 ஆம் இடத்தில் இருந்தால் பராகிரமம் உடையவன். பந்துகளின் உதவி எப்போதும் கிட்டும். சிறந்த நிபுணன். சுகவாசி. 4க்கு உடையவன் 11 ஆம் இடத்திலிருந்தால் தகப்பனை ரட்சிப்பவன்; பல வகையில் வருமானம் உள்ளவன். நற்காரியங்களையே செய்பவன். 5 குடையவன் 11 ஆம் இடத்தில இருந்தால் பிள்ளை சங்கீத வித்வான் ஆகும் பெரு பெற்றவன். அரசர் போற்றும் புகழ் மிக்கவன். ஆறுக்குடையவன் 11 ஆம் இடத்தில இருந்தால் துஷ்டர்களின் சேர்கையுடையவன் அரசினாலும் திருடர்களினாலும் இவனுடைய பொருள் பறிபோகும். சத்துருவின் மூலம் மரணம் உண்டாகும். சுபகிரகத்துடன் கூடினால் சுபகாரியங்களையே செய்பவன் ஆகின்றான். ஏழுக்குடையவன் 11 ஆம் இடத்தில் இருந்தால் மனைவி எப்பொழுதும் பதிக்குப் பணிவிடை செய்பவனாகவும் பதிவிரதையாகவும் அடக்கமுள்ளவளாகவும் அமைகின்றாள். வித்தையினால் இவளது தந்தை மேம்பட்டு விளங்குவான். ஆதலால் தந்தையிடம் இவள் அளவற்ற வாஞ்சை உடையவன். எட்டுக்குடையவன் பதினொன்றாம் இடத்தில் இருந்தால் உடல் மெலிந்தவன். பிறரால் தான் சுகமடைவதற்கு வழிகள் தேடிக் கொள்வான். ஒன்பதுக்கு உடையவன் பதினொன்றாம் இடத்திலிருந்தால் அடிமையாவான்; தானம் செய்வதில் பற்றுள்ளவன்.வியாபாரியாகவும் அமையலாம். பத்துக்குடையன் பதினொன்றாம் இடத்திலிருகப் பிறந்தவன் எதிலும் வெற்றியும் லாபத்தையும் ஈட்டக் கூடியவன். ஆண்களும், பெண்களும் ஆன குழந்தைகளைப் பெற்றவன். பணியாளர்கள் நிரம்பப் பெற்ற தனவான். பதினொன்ருகுடையவன் பதினொன்றாம் இடத்தில இருந்தால் நீண்ட ஆயுளைப் பெற்றவன். அழகு மிக்க மனிதரோடு சேர்ந்தவனாவான். நல்ல உடலமைப்பைக் கொண்டவன். எப்போதும் ஆரோக்கிய மாணவனாய்த் திகழ்வான். அழகான உடை, வாகனம் இவற்றை உடையவனாக இருப்பான். பன்னிரெண்டுக்கு உடையவன் கும்பத்தில் இருந்தால் தேவர்கள், சித்த புருஷர்கள், பிராமணர்கள், தவம் செய்பவர்கள், தோத்திரம் செய்பவர்கள் இவர்களுக்காக செலவு செய்பவன். நல்லோர்களின் வழி நடப்பவன். சாஸ்திரங்களில் உபதேசிக்கப்பட்ட புண்ய கர்மங்களின் மூலமும் ஜாதகனுக்கு அதிக செலவுகள் உண்டாகும்.
லக்னாதிபதி 12 ஆம் இடத்தில இருந்தால், ஜாதகரின் வாயில் இனிய சொற்களை எதிர்ப்பார்ப்பது அரிது. கடுகடுதவர். குடிகேடுபவர். துஷ்டர் சகவாசமும் கேட்ட நினைப்பும் கொண்டவர். தன் சகோதரனுகே எதிரியாவார். தன் தேசம் விட்டு வேறு தேசம் செல்லும் நிலைக்கு ஆளாவார். நல்ல பெயர் எடுபதற்கு வாய்ப்பு இல்லை. 2க்கு உடையவன் 12 ஆம் வீட்டில் பாபருடன் இருந்தால் துஷ்டன்; தூர தேச தீவுகளில் வாழ நேரிடும்; தன்னைவிட அறிவில் தாழ்ந்தவர்களுடன் சிநேகம் உள்ளவர். 3க்கு உடையவன் 12 ல் இருந்தால் செலவாளி, நண்பனே சத்ருவாக மாறுவான். 4க்கு உடையவன் 12 ஆம் இடத்திலிருந்தால் பாபக்கிரகங்களின் சேர்க்கையினால் தந்தைக்கு ஆகாது. அவன் வெளிநாடு போய் விடுவான். சுபர்கள் இருந்தால் தந்தைக்கு சுகத்தை கொடுப்பவன். 5 குடையவன் 12 ஆம் இடத்திலிருந்து பபகிரகங்களுடன் சேர்ந்தால் எவ்வளவு செலவு செய்தும் மகப்பேறு வாய்காதவள்; வாய்த்தாலும் ஒரு சுகமும் கிட்டாது. வெளிதேச தொடர்பு கொண்டு போருளீடுவான். ஆறுக்குடையவன் 12 ஆம் பாவத்தில் இருந்தால் கன்று மாடு முதலிய கால்நடை செல்வங்களை இழப்பான். தன தான்ய சுகம் இவனுக்கு இல்லை. எப்பொழுதும் ஊர் சுற்றியாகவே இருக்க பிரியப்படுவான். இரவு பகல் பாராமல் தனம் தேடும் முயற்சியில் ஈடுபட்டிருப்பான். ஏழுக்குடையவன் 12 ஆம் இடத்தில் இருந்தால் பரிதாபத்துக்குரியவன். இவனுக்கு வீடு வாசல் இல்லை. உறவு மற்றொருவர் இல்லை; மனைவி சுகம் அற்றவன். இவனின் மனைவி சஞ்சலபுத்தி கொண்டவள். நல்ல செலவாளி. அடாத வார்த்தை பேசுபவள். தன் வீட்டு பொருள்களையே திருடி விற்பவள். எட்டுக்குடையவன் பன்னிரெண்டில் இருந்தால் கொடூரமான வாக்கு உள்ளவன். திருட்டு தொழிலை செய்பவன். வஞ்சகன்.எந்த வேலையையும் முழுமையாகச் செய்ய மாட்டான். மாமிசம் உண்பதில் மிகுந்த பிரியம் உள்ளவன்.ஆதலால் அதன் மூலமே இவனுக்கு மரணம் சம்பவிக்கும். ஒன்பதுக்கு உடையவன் பணிரெண்டாம் இடத்திலிருந்தால் ஜாதகன் மானம் உள்ளவன். அயல் நாடுகள் சென்று வருபவன். புத்திசாலி. அழகுமிக்க மேனி படைத்தவன். ஆனால் பாபக் கிரகச் சேர்கை இருந்தால் ஜாதகன் வஞ்சகன் ஆகவும் ஆகின்றான். பத்துக்குடையன் பணிரெண்டாம் இடத்திலிருந்தால் அரசுப் பணியில் இருபதோடு சுயமாகவும் பொருள் ஈட்டக் கூடியவன். தந்தையால் சௌக்கியம் அற்றவன். வக்கிரமான புத்தி உள்ளவன். இயற்கை அழகில் ஈடுபாடு கொண்டவன். பெரும்பாலும் வெளிநாடுகளில் இவனுடைய வாழ்க்கை கழிகின்றது. நல்ல செலவாளி. பதினொன்ருகுடையவன் பணிரெண்டாம் இடத்தில் இருந்தால் கொடூரமானவன். நிலையில்லாத பிழைப்பு உடையவன். நிலையற்ற பணவசதி இல்லாதவானாகி மிக்க கெட்ட புத்திகளைப் பெற்றவனாய் இருப்பான். பன்னிரெண்டுக்கு உடையவன் மீனமாக இருந்தால் கப்பல் யாத்திரையிலும் கெட்டவர்களின் நட்பாலும் விவகாரத்தாலும் செலவு உண்டாகும்.
சூரியன் சூரியன் லக்னத்தை பார்த்தால் தகப்பன் வழி சொத்து கிடைக்கும். அரசாங்கத்தில் பணியாற்றுவார். பெண்களிததில் முரட்டுதனமாக நடந்து கொள்வார். சூரியனால் பார்க்கப்பட்டால் தந்தையின் சொத்தை நாசமாக்குபவன்; பராகிரமசலி, சுகஜீவி 5 ஆம் இடமானது சூரியனால் பார்க்கப்பட்டால் முதலில் பிறந்த சகோதரர்க்கு ஆகாது; வாயு பீடை எப்போதும் இருக்கும். ஆறாம் இடம் சூரியனால் பார்க்கப்பட்டால் பகைவர்கள் இவனிடம் தலை காட்ட முடியாது. வலது கண்ணில் ரோகம் உடையவன். தாயின் மூலம் இவனுக்கு சுகம் இல்லை. சூரியன் ஏழாம் இடத்தை முழுப் பார்வை பார்க்கும் பொழுது மனைவியோடு இன்ப சுகம் அற்றுப் போகின்றது. ஜாதகன் சோகை பிடித்தவன் ஆகின்றான். அவனது தேகம் வெளுத்து விடுகின்றது. சத்ருக்களின் தொல்லை வேறு சேர்ந்து கொள்கிறது. ஒன்பதாம் இடம் சூரியனால் பார்க்கப்பட்டால் பெண்கள் மூலமாக எந்தவித மகிழ்ச்சியும் இருக்காது. ஆனால் அவர்களை ஜாதகன் அனுசரித்து நடந்து கொள்வான். பத்தாம் இடத்தில் சூரியனுடைய பார்வை இருக்குமானால் ஜாதகன் எப்போதும் காரிய சித்தியுல்லவன். முதல் வயதிலேயே இவருடைய தாயார் இறந்துவிட வாய்ப்பு உள்ளது. சூரியன் சொந்த வீட்டிலோ, உச்ச வீட்டிலோ இருந்து பார்த்தால் தாய்க்கு சுகம் உண்டாகும். பதினொன்றாம் இடம் சூரியனால் பார்க்கப்பட்டால் எல்லாவிதமான பொருள்களையும் உறுதியாக ஜாதகன் அடைந்தே தீருவான். புத்திர இழபுடையவன். நல்ல புத்திசாலி. வேலை செய்து பிழைப்பவன்.
சந்திரன் சந்திரன் லக்னத்தை பார்த்தால் அழகுள்ளவர். தாயாள குணம் மிக்கவர். பெண்களுக்கு வசபடுபவர். திரவ சம்பந்தமான பொருள்களை வியாபாரம் செய்பவர். சந்திரனால் பார்க்கப்பட்டால் குடும்ப சுகம் உள்ளவன்; வம்ச விருதியுடையவன்; சரீர நலிவுல்லவன்; தண்ணீரால் பீடைகள் ஏற்பட கூடும். மூன்றாம் பாவத்திற்க்கு பிற கிரகங்களின் பார்வையால் ஏற்படும் பலன்கள் நான்காம் இடம் சூரியனால் பார்க்கப்பட்டால் தாய்க்கு பீடை; ஆனால் புண்ணியவான், கீர்த்தி பெறுவான். 5 ஆம் இடமானது சந்திரனால் பார்க்கப்பட்டால் நண்பர்களால் சுகம் உண்டாகிறது. பிறந்த உலகத்துக்கு பெருமை தேடித் தருபவன். வேறு தேசத்தில் வியாபாரம் செய்து ஜீவிக்க கூடியவன். ஆறாம் இடம் சந்திரனால் பார்க்கப்பட்டால் பகை மேல் பகை வரும். சுபம் வரும். சந்திரன் பார்வைப் பட்டால் இவனது மனைவி நல்ல அழகும் குணமும் வாய்ந்தவளாக அமைகிறாள்; யானையைப் போல் கம்பீரமாக நடப்பவள். ஆயினும் பிறரிடத்தில் கொள் சொல்பவளாகின்றாள்; கெட்ட நடத்தையும் உண்டு. ஒன்பதாம் இடம் சந்திரனால் பார்க்கப்பட்டால் அயல்நாடு சென்று அங்கேயே தங்கி அரசு அலுவல்கள் ஏதேனும் ஏற்று வாழ்க்கை நடத்த நேரிடும். இருபினும் செல்வத்தை அதிகமாக திரட்ட முடியாது. செலவாகும் கிடைக்காது. பத்தாம் இடம் சந்திரனால் பார்க்கப்பட்டால் கால்நடைகள் நிறைந்த சூழ்நிலைகளில் அது தொடர்பான தொழிலை உடையவன். மகன் மனைவி இவர்களால் சுகத்தை அடையக் கூடியவன். ஆனால் தந்தையாலோ, உறவினர்களாலோ சுகம் கிடைப்பதில்லை. பதினொன்றாம் இடம் சந்திரனால் பார்க்கப்பட்டால் பொருளின் மூலம் தனலாபம். வியாதி அண்டாது ஒழியும். நாற்கால் பிராணிகளை உடையவன். தங்கம் பெருகும். அணைத்து வழிகளிலும் லாபம் உண்டாகும்.
செவ்வாய் செவ்வாய் லக்னத்தை பார்த்தால் எத்தகைய முரடனானாலும் தன்னுடைய சாகஸத்தால் சிநேகிதர் ஆக்கி கொள்பவர். தர்ம சிந்தனை உள்ளவர். செவ்வாயின் திருஷ்டி இருக்குமானால் குடும்ப சுகம் இல்லை. தனலாபம் இல்லை; தீராத வயிற்று வழி உள்ளவர். நான்காம் இடம் சந்திரனால் பார்க்கப் பட்டால் ஆயுள் குறைவு. சுகக் குறைவு. 5 ஆம் இடமானது செவ்வாயினால் பர்கப்பட்டால் முதலில் பிறந்த பிள்ளை நாசம் ஆகிறது. பிச்சை எடுக்கும் நிலையம் ஏற்படுகிறது. ஆறாம் இடம் செவ்வாயால் பார்க்கப்பட்டால் ஜாதகரின் பகைவர்கள் நாசமாவர்கள். அம்மான் மூலமும் இரும்பு ஆயுதங்களினாலும், அக்னியினாலும் எப்பொழுதும் ஆபத்து உண்டு. செவ்வாயினால் ஏழாம் இடம் பார்கப்பட்டால் ஜாதகன் மனைவியை விட்டுபிரிந்திருக்க நேரிடும்; அல்லது விரைவில் அவளது மரணம் ஏற்படக்கூடும். ஜாதகனை நீரிழிவு நோய் தாக்கக்கூடும். ஸ்திரிகளால் சண்டையும் பயணத்தில் நஷ்டமும் ஏற்படுகின்றது. ஒன்பதாம் இடம் செவ்வாயினால் பார்க்கப்பட்டால் பாக்கியவான். மைத்துனருடன் சேர்ந்து கொண்டு தர்மமில்லாத காரியங்களில் ஈடுபடக் கூடியவன். கொடுமையான குணம் படைத்தவன். ஆனாலும் சுகவாசி. பத்தாம் இடம் செவ்வாயினால் பார்க்கப்பட்டால் ஜாதகன் எந்தவித சிரமமும் இல்லாமல் காரியத்தில் வெற்றி அடைபவன். செவ்வாயின் தசை மூன்றாவது தசையாக வந்தால் ஜாதகன் மிகுந்த சுகத்தையும், பாக்கியத்தையும் அடைகின்றான். பதினொன்றாம் இடம் செவ்வாயால் பார்க்கப் பட்டால் ஆயுள் விருத்தி. மனைவியின் தூய்மை களங்கப்படும். ஜன்மத்தில் இருந்தது 3 ஆவது ராசி இரட்டையாக இருப்பின் பெருத்த சரீரம் உடையவன். அவரது பிள்ளைகட்கு சௌகரியமும், வாகனங்களின் மூலம் சுகமும் உண்டாகும்.
புதன் புதன் லக்னத்தை பார்த்தால் சிற்பகலையில் ஈடுபாடு கொண்டவர். புகழ்மிக்கவர். பல வழிகளில் வெகுமானம் பெறுபவர். புதனால் பார்க்கப்பட்டால் எப்பொழுதும் ஒப்பற்ற தன சுகம் உள்ளவர்; வஞ்சகர். 3 ஆம் இடம் சூரியனால் பார்க்கப்பட்டால் முன் சகோதரன் இல்லாமல் போகின்றார். நான்காம் இடம் செவ்வாயினால் பார்க்கப் பட்டால் நான்காவது ஆண்டு தாய்க்கு கண்டம். அரசனாலும் பூமியினாலும் சுகம். ஜாதகனின் பார்வை பட்டாலே பகைவர் ஓடுவர். 5 ஆம் இடமானது புதனால் பார்க்கப்பட்டால் புத்திரி ஜெனனம்; கீர்த்தி ஐஸ்வர்யம் கிட்டும். ஆறாம் இடம் புதனால் பார்க்கப்பட்டால் எத்தகைய பகையையும் எதிர்த்து அழிப்பான். அம்மான் மூலம் சுகமடைவான். கடினமான காரியத்தையும் எளிதாக முடிப்பவன். பிறரிடம் குற்றம் சொல்பவன். புதனால் பார்க்கப்பட்டால் மனைவியினால் சுகம் உண்டு. ஜாதகன் நல்ல கட்டழகனாய் விளங்குவான். கல்வி வளமும் தனதான்ய சம்பத்தும் மிக்கவன். ஒன்பதாம் இடம் புதனால் பார்க்கப்பட்டால் வற்றாத செல்வமும் மக்கட்பேறும் அவர்களால் சுகமும் அடைவான். அயல் நாடுகளுக்குச் செல்லும் யோகம் இவனுக்கு உண்டு. அரச மரியாதையைப் பெறுவான். பத்தாம் இடம் புதனால் பார்க்கப் பட்டால்ஜாதகன் வேலை செய்து பிழைப்பவனாகவும், மக்களின் தலைவர்களால் நேசிக்கப் பட்டவனாகவும், எதிலும் முயற்சி உள்ளவனாகவும் ஆகின்றான். பதினொன்றாம் இடம் புதனால் பார்க்கப்பட்டால் பாக்கியசாலி. எல்லா வகையான பொருளின் மூலம் சுகத்தை பெற்றவன். ஊக்கத்தால் சாஸ்திரத்தில் பிரதானமான தேர்ச்சி பெற்றவன். அதிகப் புகழ் பெற்றவன். பெண் குழந்தைகளை அதிகமாக பெறுபவன்.
குரு குரு லக்னத்தை பார்த்தால் யாகம், விரதம் ஆகியவற்றில் ஈடுபாடு கொண்டவர்.சதுகளிடமும், ஞானிகளிடமும் ப்ரீதி உள்ளவர். குருவினால் பர்ர்கப்பட்டால் பாக்கியவான். நல்ல குணம் மக்கள் மத்தியில் செல்வாக்கு உள்ளவர். 3 ஆம் இடம் சந்திரனால் பார்க்கப்படால் சகோதரிகள் அதிகம் உடல் வலு அற்றவர். நான்காம் இடம் புதனால் பார்க்கப்பட்டால் தாய்க்கு அதிகமான சௌக்கியமும் அரசு வழியில் ஆதாயமும் செல்வப் பெருக்கும் பிதாவின் தனமும் காமசுகமும் கிடைக்கிறது. 5 ஆம் இடமானது குருவால் பார்க்கப்பட்டால் அதிகமான சந்தான சௌக்கியம், சாஸ்திரங்களில் தேர்ச்சி, நீண்ட ஆயுள், நிறைந்தத செல்வம் உண்டாகிறது. ஆறாம் இடம் குருவினால் பார்க்கப்பட்டால் பகைவர் பெருகுவர். செல்வம் சீரழியும். அம்மானால் தொல்லைகள் ஏற்படும். குருவினால் பார்க்கப்படும் பொழுது களத்திர சுகம், வியாபார லாபம், பெரும் புகழ் அனைத்தும் கிட்டுகிறது. தனவான் மட்டுமின்றி தர்மவானாகவும் திகழ்கின்றான். ஒன்பதாம் இடம் குருவினால் பார்க்கப்பட்டால் தர்ம காரியங்களில் ஈடுபடக் கூடியவன்; சாஸ்திரங்களில் தேர்ச்சி பெற்றவன்.அரசு மூலம் செல்வதை அடைபவன். இருந்தாலும் நல்ல குணம் இவனுக்கு கிடையாது. பத்தாம் இடம் குருவினால் பார்க்கப் பட்டால் அரண்மனையில் (இக்காலத்தில் அமைச்சர்களின் அலுவலகத்தில் அல்லது வீட்டில் பணி செய்யக் கூடியவன்) பணி செய்யக் கூடியவன். மகன், மனைவி இவர்களிடம் அன்பு மிக்கவன். அவர்களால் சுகமும் பெறுகின்றான். இவனுக்கு முன்னதாக பிறந்தவர்களை காட்டிலும் இவனிடத்தில் செல்வம் மிகுதியாக சேர்கின்றது. மாட மாளிகை கட்டி வாழ்பவன். பதினொன்றாம் இடம் குருவால் பார்க்கப்பட்டால் நிலையான ஆயுள், பிள்ளைகள், மனைவி, பிள்ளைகள் இவற்றால் சுகம் பெற்றவன். காரிய வெற்றி உடற் சோர்வு இவற்றை கொண்டவன்.
சுக்ரன் சுக்ரன் லக்னத்தை பார்த்தால் வேசிகளின் சேர்கை உள்ளவர். தனலாபம் உள்ளவர். சுக்கிரனால் பார்க்கப்பட்டால் ஒவ்வொருநாளும் தன சுகம்; உறவினருக்கு உதவுபவன்; பகைவர்களை நாசம் செய்பவன். 3 ஆம் இடம் செவ்வாய்யால் பார்க்கப்பட்டால் பராகிரமம் உள்ளவர். சகோதர்களை இழப்பார். நான்காம் இடம் குருவால் பார்க்கப்பட்டால் பண்டிதனாவான். உறவினர் உதவியும் வாகன சுகமும் கிட்டும். 5 ஆம் இடம் சுகிரனால் பார்கப்பட்டால் முதலில் புத்திரனும் பிறகு பெண்ணும் பிறக்கும்; ஜாதகன் கல்வி, செல்வம் இரண்டையும் பெறுகின்றான். ஆறாம் இடம் சுக்ரனால் பார்க்கப்பட்டால் தாய் மாமனால் நிறைந்த சுகம். பகைவனை நாசம் செய்யக் கூடியவன். மக்களால் போற்றப்படுபவன். சுக்கிரனால் ஏழாம் பாவம் பார்க்கப்பட்டால், மனைவியால் பல சௌகர்யங்களை ஜாதகன் அடைகின்றான். மக்களும் நல்லவர்களாகவே அமைகின்றனர். குழந்தைகள் சற்றுக் கூடுதலாகவே பிறக்கின்றனர். வியாபார லாபத்தை ஜாதகன் வெகுவாகப் பெறுகின்றான். தெளிவான புத்தி ஜாதகனுக்கு அமைகிறது. ஒன்பதாம் இடம் சுக்கிரனால் பார்க்கப்பட்டால் பலவகையிலும் சௌபாக்கியத்தை பெறுகின்றான். அயல் நாட்டில் தொழில் செய்பவனாகவும் அந்த நாட்டு மன்னனின் அபிமானத்தை பெற்றவனாகவும் அமைகின்றான். பத்தாம் இடம் சுக்கிரனால் பார்க்கப் பட்டால் தனது ஊரிலேயே அரசு வழி தொடர்பால் ஆதாயம் உண்டு. புத்திரர்கலாலும், பந்துகளாலும் நேசிக்கப் படுபவன். தலைவலி இவனை விட்டு நீங்காத நோய். பதினொன்றாம் இடம் சுகிரனால் பார்க்கப் பட்டால் லாபம் பெருகும்.சுகம் செல்வம் உடையவன். கிராம அதிகாரியாவான். தன் உற்றான் உறவினர்களைக் காப்பாற்றுவான். முன்னோரின் தொழிலை காப்பதில் விருப்பமுள்ளவனாயிருப்பான்.
சனி சனி லக்னத்தை பார்த்தால் பயங்கர ரோகதால் பீடிகப்பட்டவர். மூர்க்க குணம் உள்ளவர் சனியினால் பார்க்கபட்டால் பணத்தை விரயம் செய்பவன். தனது சொந்தகாரர்களையே சத்ருகள்ளக நினைப்பவன். 3 ஆம் இடம் புதனால் பார்க்கப்பட்டால் சகோதர சௌக்கியம் கொண்டவர். நான்காம் இடம் சுக்கிரனால் பார்க்கப்பட்டால் மாதாவின் மகிழ்ச்சிக்கு குறைவிராது. வாகன சுகம் உண்டு. 5 ஆம் இடம் சனியினால் பார்க்கப் பட்டால் புத்திர சுகம் இல்லை. குலப் பற்று கொண்டவன் ஆறாம் இடம் சனியினால் பார்க்கப் பட்டால்,சத்ருக்களுக்கு நாசத்தை செய்கிறவன். அம்மானுடன் கூடினவன். கண் முகம் கால் இவற்றில் ரணபீடை உள்ளவன். தடிப்பான வார்த்தை பேசுபவன். காய்ச்சல் மயக்கம் இவற்றால் அடிக்கடி பீடிக்கப்படுபவன் சனியினால் களத்திர ஸ்தானம் பார்க்கப்படும் போது மனைவிக்கு ஆகாது. அவளுடைய அழிவுக்கு காரணமான செயல்கள் நடக்கின்றன. அவளுக்கு கண்டங்கள் தொடர்கின்றன. ஜாதகனை பாண்டு ரோகம் பீடிக்கிறது. காய்ச்சல், வயிற்றுக்கடுப்பு நோய்கள் இடைவிடாது தொடர்கின்றன. ஒன்பதாம் இடம் சனியினால் பார்க்கப்பட்டால் ஊரிலான்; உறவு இல்லான்; பிற நாடு சென்று வாழ்கையை நடத்துபவன். தைரியசாலி. பத்தாம் இடம் சனியினால் பார்க்கப் பட்டால் இவனுடைய தந்தை விரைவில் அழிகின்றார். தாய் மூலமும் அவ்வளவு சுகம் இல்லை. அதிக காலம் வாழ்ந்திருக்க மாட்டன். ஜீவித்தால் பாக்கியமுள்ளவனாக இருப்பான். பதினொன்றாம் இடம் சனியால் பார்க்கப் பட்டால் கொடுரமான மூர்க்கர்கள் மூலம் தன லாபம் உண்டாகும். பிள்ளைகளிடத்தில் இருந்து சுகமும் கருமை நிறம் கொண்ட எள் போன்ற தான்ய லாபமும் கிட்டும்.
3 ஆம் இடம் குருவால் பார்க்கப்பட்டால் தகப்பன் மூலம் செல்வ வரவு ஆனாலும் தகப்பனை பிரிவார். நான்காம் இடம் சனியினால் பார்க்கப்பட்டால் பிதாவின் தாயாருக்கு (பாட்டிக்கு) மரணமுன்டாகும். 4, 6 வயதுகளில் கடுமையான கண்டம்.
3 ஆம் இடம் சுகிரனால் பார்க்கப்பட்டால் பெண் குழந்தை பிறப்பதனால் வேறு தேசம் செல்லுபவர்; அரசினால் உதவியுண்டு.
சில கிரகங்கள் 2 ஆம் இடத்தில கூட்டாக இருப்பதன் பலன். 3 ஆம் இடம் சனியினால் பார்க்கப்பட்டால் பராக்கிரமம் உள்ளவர். பலவான்; சகோதர வர்கத்துக்கு சௌக்கியம் இல்லை. ஏழுக்குடையவன் சுபகிரகதுடன் கூடினாலும், பார்க்கப்பட்டாலும், ஜாதகன் சகல சௌபாக்கியங்களையும் அடைவதோடு குணவானாகவும், தனவானாகவும் விளங்குகின்றான். தன் பத்தினியின் மூலம் பாக்கியத்தையும் செல்வத்தையும் பெறுகின்றான்.
சூரியன், சனி, செவ்வாய் இருந்தால் தனநாசம் 3 ஆம் பாவாதிபதிக்கு வேறு கிரகங்களின் சேர்கையால் உண்டாகும் பலன்கள். ஏழுக்குடையவன் ஜாதகத்தில் உச்சமானால், நல்ல குணம் மிக்கவனாய் பலரும் பாராட்டும் பெரு பெறுகின்றான். தனம், தானியம் நிறைந்த குடும்ப தலைவனாக விளங்குகின்றான்.
சூரியன் செவ்வாய் இருந்தால் குலதோசம் ஏழுக்குடையவன் சத்ருவாகவோ, நீசனாகவோ ஒரு ஜாதகத்தில் அமைந்து விட்டால் பலன் நேர் மாறாக அமைகின்றன.
சூரியன் பாபர்களின் செர்கையோடு இருந்தால் செல்வத்தை அள்ளிக்கொடுப்பன். லக்னத்தில் குரு 3 ஆம் இடத்ததிபனுடன் கூடி இருந்தால் நாற்கால் பிராணிகளுக்கு சேதம். 7 ஆம் இடம் களத்திர பாவமாதலால் மேலே கூறப்பட்ட புருஷ ஜாதகத்திற்க்கு உண்டான பலன்கள் பெண்ணின் ஜாதகத்தை வைத்துப் பார்க்கும் போதும் பொருந்துவதேயாகும்.
குரு 2 க்குடையவனாகி 2 ஆம் இடத்திலேயே இருந்து செவ்வாயுடன் கூடுவானாகில் குபேரனுக்கு ஒப்பாக வாழ்வான். 3 ஆம் இடத்ததிபன் ராகுவுடன் கூடி லக்னத்தில் இருந்தால் பாம்பினால் பயம். கணவனுக்கு மனைவி, மனைவிக்கு கணவன் என்ற நிலையில் இதுவரை கூறப்பட்ட கருத்துக்களில் ஆண் பெண் ஜாதகதிற்கேற்ப பொருத்திப் பார்த்துக் கொள்ள வேண்டும்.
2 ஆம் இடத்து அதிபதி உச்சம் நீசம் முதலிய வீடுகளில் இருபதால் ஏற்படும் பலன்கள் 3 ஆம் இடத்ததிபன் புதனுடன் சேர்ந்தால் கழுத்தில் ரோகம், கண்டமாலை, உள்நாக்கு படருதல் போன்ற நோய்கள் வரலாம் பெண்ணின் ஜாதகத்தை வைத்து அவளுக்கு வாழ்க்கை துணைவியாகப் போகும் கணவனின் நிலை பற்றி சில சிறப்பியல்புகள் இங்கே குறிக்கப் பெறுகின்றன.
2 க்குடையவன் சுபக்கிரகமாகி தனது உச்ச வீட்டிலோ. கேந்திரதிலோ நட்பு வீட்டிலோ, சுபரின் வீட்டிலோ இருக்கப் பிறந்தவன் தனது வாக்கின் திறமையை வைத்தே குடும்பத்தை காப்பாற்ற வல்லவன். 3 ஆம் இடத்ததிபன் ஆறாம் இடத்தில் இருந்து பாபக் கிரகத்தால் பார்க்கப்பட்டால் விஷபயம் சனியின் வீடோ சனியின் நவாம்சமோ பெண்ணின் ஜாதகத்தில் 7 ஆம் இடமாக இருந்தால் கணவன் வயதானவனாகவும், மூர்க்கனாகவும் இருப்பான்.
2 ஆம் இடத்தில 2 க்கு உடையவன் இருந்தாலும் புதனோ சுக்கிரனோ 2க்கு உடையவன் ஆனாலும் அல்லது 2 க்கு உடையவன் நட்பு வீட்டில் இருந்தாலும் மக்கள் போற்றும் பரோபகரியாக விளங்குவான். திரிகோண வீட்டில் இருந்தால் பணக்காரனாக மட்டும் ஆவான். 3 ஆம் தனுசு ராசியாக இருந்து செவ்வாயின் சேர்கை இருந்தால் காதில் ரோகம். செவ்வாயின் வீடோ, செவ்வாயின் நவம்சமோ 7 ஆம் இடமாக இருந்தால் கணவன் கோபம் கொண்டவனாகவும் ஸ்திரி லோலனாகவும் இருப்பான்.
2 க்கு உடையவன் 12 ல் இருந்த போதிலும் இரண்டு கிரகங்களுடன் சேர்ந்து இருப்பானேயானால் அதிகமான் செல்வத்தை பெறுகிறான். 3 ஆம் இடத்ததில் சனியிருந்து மாந்தியுடன் கூடினால் வாயுரோகம். சுக்ரனின் வீடோ, சுக்ரனின் நவம்சமோ 7 ஆம் இடமாக இருந்தால் கணவன் அழகும் அந்தஸ்தும் கொண்டவனாக அமைவான்.
2 க்கு உடையவான் உச்ச வீட்டில் இருந்து குருவினால் பார்க்கப்பட்டால் ஆயிரம் பேர்களை காப்பார்ருபாவனாக அமைகிறான் 3 ஆம் இடம் பாபரின் வீடாகி பாபகிரகம் கூடுமானால் ஜாதகனுக்கு நாசம். அதுவே சுபரின் வீடானால் சகோதர ஒற்றுமை ஏற்படும். புதனின் வீடோ, புதனின் நாவம்சமோ 7 ஆம் இடமாக இருந்தால் தொழிலைப் பற்றிய அறிவும் சாமர்த்தியமும் உடையவனாக விளங்குகின்றான்.
3 ஆம் இடத்ததிபனோடு ஸ்திரீகிரகங்கள் 9 ஆம் இடதிலிருந்தால் சகோதரிகளும், புருஷகிரகங்கள் அங்கிருந்தால் சகோதரர்களும் உண்டாவர். சந்திரனின் வீடோ அல்லது நவம்சமோ 7 ஆம் இடமானால் கணவன் கோழையாகவும், காமவசப்படவனாகவும் ஆகின்றான்.
குரு சுக்கிரன் இவர்களின் நவாம்சத்தில் 7 ஆம் இடம் அமைந்திருந்தால் இவளுக்கு வாய்க்கும் கணவன் வீரம் உள்ளவனாகவும் குணவானாகவும் திகழ்வான்.
சூரியன் வீடோ, சூரியனின் நவம்சமோ 7 ஆம் இடமானால் கணவன் எப்பொழுதும் ஏதாவது ஒரு வேளையில் ஈடுபட்டவனாகவும் , கடுமையான சுபாவம் உள்ளவனாகவும் இருப்பான்.
10ல் கேது தனித்து இருந்தால் நல்ல வேலை கிடைப்பது கடினம்
சோம்பலாக இருப்பர்.எதிலும் அக்கரை இருக்காது எதிலும் கவலை இருக்காது
10ல் ராகு கேது இருந்து 6,8,12 க்குடையவர் சேர்ந்திருந்தால் ஜாதகம் சரியான உத்தியோகமிருக்காது.
10ல் சூரியன் குரு நல்ல உத்தியோகத்தை தரும்
ஒருவரது ஜீவனஸ்தானமாகிய 10 மிடத்தில் சூரியன் சம்பந்தப்பட்டால் அரசு உத்யோகம் அரசியல் வருமானம் ஏற்படும்.நகைத் தொழில், தோல் உற்பத்தி, தோல் பதனிடுவது, தோல் பொருள் உற்பத்தி, விற்பனை, வைத்தியம், எலெக்ட்ரிகல் பொருள்கள் உற்பத்தி மற்றும் விற்பனை, மின்துறையில் பணிபுரிதல் அல்லது மின்துறை சார்ந்த பணிகளை காண்ட்ராக்ட் எடுப்பது போன்ற வழிகளில் வருமானம் வரும்
பத்தாமிடத்தில் சந்திரன் சம்பந்தப்பட்டால் நீர் வசதியுடன் கூடிய விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த துறைகளில் ஈடுபடுதல் மூலமும், குளிர்பானங்கள் தயாரிப்பு, ஐஸ்க்ரீம், மினரல் வாடர் உற்பத்தி மற்றும் விற்பனை, எ.சி. மெஷின் தயாரிப்பு, விற்பனை, மெக்கானிக், எந்த
பொருளையும் விற்கும் டீலர்ஷிப் , கப்பல் கட்டுவது, கப்பல் கட்டும் துறை சார்ந்த பணிகள், மாலுமியாகி கப்பலை இயக்குவது முதலியன.
சுக்கிரன் 2ல் இருந்தால் கவிஞன், எழுத்தாளர் இவர்களது பேச்சு ரொம்ப இனிமையா இருக்கும். ஆனால் இத்துடன் சனி,செவ்வாய் சம்பந்தபடாது
இருக்க வேண்டும்
சுக்கிரன்,4 ல் இருந்தால் இசைத்துறையில் ஈடுபடுவர்.
சனி,11 ல் இருப்பது- சிற்பம்,சித்திரம் போன்ற தொழில் சினிமாவில் ஆர்ட் டைரக்டர்
சனி,சுக்கிரன் 10 ல இருப்பது கலைத்துறை
புதன்,சுக்கிரன் 10 ல் சினிமா, அழகு சாதனம்,ஆடம்பர பொருள் விறபனை
சந்திரன்,குரு 7ல் இருப்பது ஆன்மீகம்,பாட்டு எழுதுவது,கவிஞன்
சந்திரனுக்கு 10ல் புதன் இருப்பது ஒரு தொழில் திறமையாக செய்து சம்பாதிப்பார்.
2 ஆம் அதிபதி பலம் பெற்று கேந்திர,கோணம் பெற்று குருவின் சம்பந்தம் பெற்றால் மக்களை கவரும் நல்ல பேச்சாற்றல் இருக்கும்
புதன் இருந்தா வக்கீல் மாதிரி பேசுவார். குரு இருந்தா அருமையா புத்திமதி சொல்வார். சனி இருந்தா கண்டபடி பேசுவார். செவ்வாய் இருந்தா மத்தவங்களை அதிகாரம் பண்ணும் பேச்சு இருக்கும்
சந்திரன் 10 ல் இருந்தா நல்ல மருத்துவர். நீர் வசதியுடனான விவசாயம்...
சுக்கிரன்,குரு,செவ்வாய் இவர்களில் ஒருவர் 2 ஆம் பாவகத்தில் இருந்தால் சுக்கிரன் தனுசு,மீனம்,ரிசபம்,துலாத்தில் 2,11,10 ஆம் பாவகத்தில் இருந்தால் ஃபைனான்ஸ் செய்யலாம்
ரியல் எஸ்டேட் செய்ய பலம் பெற்ற செவ்வாய் .2,11 ல் நில ராசியில் இருக்க வேண்டும்..
வழக்கறிஞர்: குரு,புதன் இணைந்து 2,10,11 ல் இருக்க
எழுத்தாளர்: புதன் அல்லது குருவிற்கு 1,5,9 அதிபதிகள் சம்பந்தமடைந்திருக்க
இஞ்சினியர்:செவ்வாய் 10 ல் சம்பந்தப்பட
சிறந்த மேனேஜர்: 8,10 ஆம் அதிபதிகள் சம்பந்தம்மடைந்திருந்தால்
ரியல் எஸ்டேட் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்க செவ்வாய் பலமாக இருக்க வேண்டும் அத்துடன் 4மிடமும் 10 மிடமும் செவ்வாயுடன் பொருந்தி வர வேண்டும் அப்படி யிருந்தால் ரியல் எஸ்டேட் வியாபாரத்தில் நல்ல லாபம் சம்பாதிக்க முடியும். ஜாதகத்தில் குறைபாடு இருக்கமானால்
பவளம் (செவ்வாய்),கோமேதகம் (ராகு) அணியலாம். ராகுவை போல கொடுப்பவனும் இல்லை. கேதுவைப்போல் கெடுப்பவனும் இல்லை. தந்திரம், முரட்டுத்தனம், குறுக்குவழி அனைத்து சட்ட ஓட்டைகளும் அறிந்தவர் ராகு பகவான். பல மிகப்பெரிய அரசியல் ஊழல்களுக்கு காரணமாக இருப்பதும்
இந்த ராகுவே காரணம்.
6மிடம் நோய்
8மிடம் அவமானம்
12 மிடம் துக்கம் துயரம்
ஒருவருக்கு லக்னாபதி 6,8,12ல் இருந்தால் அவர் சொகுசாக உட்கார்ந்து வேலை பார்க்க முடியாது
வெளிநாடு யோகம் யாருக்கு அமையும்?
1. குரு, சனி, சந்திரன், சுக்கிரன் ஆகியோர் கெடாமல் வலுவாக இருக்க வேண்டும்.
2. வாயு கிரகங்களான குருவும், சனியும்,
நீர்கிரகங்களான சந்திரன், சுக்கிரன் ஆகியோர் கெடாமல்
நீர் ராசிகளான கடகம், விருச்சிகம், மீனம் ஆகியவற்றில் அமைந்தால் வெளிநாட்டு யோகம் அமையும்.
3. 9, 12க்குடையவர்கள் ஜாதகத்தில் நல்ல விதமாக சம்பந்தப்பட்டால் வெளிநாட்டு யோகம் அமையும்.
4. ராகு - கேதுக்கள் 3,6,11 ஆமிடங்கள் மற்றும் 5,7,9 ஆம் இடங்களில் இருந்தால்
வெளிநாட்டு யோகம் அமையும்
சனி நிற்றல் நடத்தல் உடல் உழைப்பு விவசாயம் உணவு பயிர்கள் ஹோட்டல் மெடிக்கல் ரேப் முதலியன.
அவமானம் தந்து வெகுமானம் தரும் தொழில்
குரு அமர்தல் நீதியாக நடத்தல்
சூரியன் வெயில் படுதல் அரசு உத்தியோகம்
சுக்ரன் கலையம்சம் கொண்ட தொழிலில் ஈடுபடுதல் ஆடம்பர தொழிலில் ஈடுபடல்.
ஜவுளி தொழில், சாப்பட்வேர் தொழில்
புதன் அறிவுசார்ந்த புத்திகூர்மை தொழிலில் ஈடுபடுதல்
ராகு\கேது அதுசார்ந்து இருக்கும் கிரகத்தை பொருத்தது
சந்திரன் நீர், மனசு சார்ந்த தொழில்
செவ்வாய் ராணுவம் போலீஸ் வீரம் சார்ந்த தொழில் அமைப்பு
ஆகும்
சித்திரை மாதம் தமிழ் புத்தாண்டின் துவக்க மாதம். இந்த மாதத்தை எந்த அளவு மகிழ்வுடன் வரவேற்கிறோமோ அதே போல இந்த மாதத்தில் பிறந்தவர்களையும், அனைவரும் விரும்புவது உண்டு. இந்த மாதத்தில் பிறந்தவர்கள் காரியம் சாதிப்பதில் வல்லவர்கள். ஏதாவது ஒரு லட்சியத்தை மனதில் கொண்டு அதை நறைவேற்ற வேண்டும் என்பதில் முழு மூச்சுடன் ஈடுபடுவார்கள். எந்த துறையில் இருந்தாலும் அந்த துறையில் பிரகாசிக்கும் வாய்ப்பு உண்டு. குறிப்பாக அறிவியல் மற்றும் காவல் துறைகள் இந்த மாதத்தில் பிறந்தவர்களுக்கு ஏற்றவை.
உங்கள் முயற்சியில் மின்னல் வேகம் இருக்கும். எதற்கும் கலங்காத மனம் உண்டு. இந்த வேகத்தை செயல்படுத்தும்போது மற்றவர்களை பகைத்துக்கொள்ள வேண்டி வரும். நீங்கள் ஒரு தொழிலதிபராக இருந்தால் சக தொழிலாளர்களை விரட்டி வேலை வாங்க வேண்டியிருக்கும். அப்போது அவர்கள் உங்களை அக்னி போல நனைத்து ஒதுங்கிப்போவார்கள். உங்களை திட்டுவார்கள். இதையெல்லாம் தாங்கிக்கொள்ளும் பக்குவம் உங்களுக்கு இருக்க வேண்டும். வேலை செய்யாமல் ஏதாவது ஒரு மூலையில் முடங்கி இருப்போம் என்ற எண்ணமே உங்களுக்கு பிடிக்காது. சூரியனின் பலத்தால் உங்களிடம் ஆற்றல் அதிகம்.
செவ்வாய் உங்கள் சக்தியை வெளிப்படுத்தும். சுக்கிரன் உங்களை எதிர்ப்பவர்களை விரட்டியடிக்கும் தன்மையைக் கொடுப்பார். இன்னும் கொஞ்சநிõள் கழித்து ஒரு காரியத்தை செய்வோமே என்று ஒதுக்கிவைக்கும் பழக்கம் உங்களிடம் இல்லை. பெரிய துணிவைப் பெற்றுள்ள நீங்கள், உங்கள் மனதிற்குள் கோழை என்றே உகளை எண்ணிக்கொள்வீர்கள். இதற்கு காரணம் அவசரமாக முடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் பரபரப்புடனும், ஆத்திர உணர்வுடனும், உணர்ச்சி கிளர்ந்தெழுவதாலும் ஏற்படும் நிரம்புத்தளர்ச்சியால் யாரைப் பார்த்தாலும் கத்தத் தொடங்கிவிடுவீர்கள்.
இந்த கோபத்தை அடக்க நீங்கள் பழகிக்கொண்டால் உங்கள் வாழ்க்கை சித்திரை சூரியன் போல பிரகாசமாக அமையும். பொதுவாகவே சித்திரை மாதத்தில் பிறந்தவர்களுக்கு கோபம் மிக அதிகமாக இருக்கும். சூரியனின் வெப்ப சூழலில் பிறந்ததால் ஏற்படும் ஆத்திரமே இது. இதற்கு உடல் நிலத்தையும் பேணிக்கொள்வதன் முலம் ஆத்திரத்தை அடக்கலாம். இந்த மாதத்தில் பிறந்தவர்கள் எண்ணெய் தேய்த்துக் குளிப்பதை வழக்கமாக வைத்திருக்க வேண்டும். வாரம் ஒரு முறைய õவது குளிர்ந்த நீரில் எண்ணெய் தேய்த்து நீராட வேண்டும். திருத்தலங்களுக்கு சென்று அங்கு ஓடும் ஆறுகளில் மூழ்கி நீராடவேண்டும். சித்திரை மாதத்தில் பிறந்த பெண்கள் நிடை, உடை, பாவனைகளில்கூட கவர்ச்சி அதிகமாக இருக்க வேண்டும் என விரும்புவார்கள்.
இந்த கவர்ச்சியின் காரணமாக மற்ற மாதங்களில் பிறந்தவர்கள் உங்களிடம் பொறாமை கொள்வார்கள். ஆனால் உங்கள் உள்மனதை புரிந்துகொண்டால் அவர்கள் உங்களிடம் ஆயுள் முழுவதும் நிட்புடனும் உறவுடனும் இருப்பார்கள். மொத்தத்தில் உங்கள் முன்கோபத்தை மட்டும் தவிர்த்துவிட்டால் உங்களை வெல்ல யாராலும் முடியாது. உங்கள் இளம் வயதில் நீங்கள் கோபக்காரராக இருப்பதால் யாருக்கும் பாதிப்பு இல்லை. ஆனால் திருமணமான பிறகு இந்த கோபத்தை அடியோடு ஒழிக்க வேண்டும். |
வைகாசியில் பிறந்தவர்கள் எதையும் அவ்வளவு எளிதில் மறந்துவிட மாட்டார்கள். காலம்தான் இவர்களுக்கு மறதியைக் கொடுக்க வேண்டும். இவர்கள் வாழ்க்கையில் பல அனுபவங்களை பெறுவார்கள். இதை மற்றவர்களிடம் சொல்லி, எனது அனுபவத்தில் நான் இன்னின்ன துன்பங்களையும் இன்பங்களையும் சந்தித்திருக்கிறேன். என்னை முன் உதாரணமாகக் கொண்டு நடந்துகொள்ளுங்கள் என கூறுவர். இதனால் துன்பத்தையும் இன்பத்தையும் சமமாக பாவிக்கும் பழக்கம் இவர்களிடம் உண்டு. இவர்கள் திடகாத்திரமான உடலமைப்பு கொண்டவர்கள். இவர்களுக்கு நோய் ஏற்பட்டாலும், அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் டாக்டரிடம் போகக்கூட வேண்டாம் என நினைத்து தங்கள் பணியை பார்த்துக் கொண்டிருப்பார்கள்.
அதேநேரம் இவர்களிடம் பொறுமை அதிகம் என்பதால் வேலையை முடிக்க அதிகநேரம் எடுத்துக் கொள்வார்கள். இன்பத்தையும் துன்பத்தையும் சமமாக பாவிப்பதுபோல் இந்த மாதத்தில் பிறந்த தொழிலதிபர்களாக இருந்தாலும் சாதாரண தொழிலாளியாக இருந்தாலும் அவரவர் துறையில் கீழ்மட்டம் முதல் மேல்மட்டம் வரை வேலைகளை தெரிந்து வைத்திருப்பார்கள். இந்த மாதத்தில் பிறந்தவர்களுக்கு படிப்பு வராவிட்டாலும் அதைப் பற்றி கவலை கொள்ள மாட்டார்கள். தங்கள் அனுபவ அறிவால் படித்தவர்களை விட சிறப்பாக செயல்படுவார்கள். இவர்கள் மற்றவர்கள் விஷயத்தில் தலையிட மாட்டார்கள்.
ஆனால் யாராவது இவர்களிடம் சண்டை போட்டால் கடைசிவரை விடாப்பிடியாக நின்று அதில் வெற்றி பெறும்வரை போராடுவார்கள். ஆனால் இந்த மாதத்தில் பிறந்தவர்களுக்கு என்னதான் பொருள் வந்தாலும் அது கையில் நிற்காத அளவிற்கு செலவழிந்து போவதுண்டு. செலவுகளை கட்டுப்படுத்த முயன்றாலும், வீட்டில் உள்ள மற்றவர்களால் நிர்ப்பந்திக்கப்பட்டு செலவழிக்க வேண்டிய அவசியம் வந்துவிடும். இவர்கள் வீட்டை சுத்தமாக வைக்க வேண்டும் என்பதில் ஆர்வம் கொண்டவர்கள். சிறு குடிசையாக இருந்தாலும் கூட அதனுள் நுழைந்தால் பெரிய மாளிகைக்குள்ளோ அல்லது புனிதமான கோயிலுக்குள்ளோ வந்ததுபோன்ற உணர்வு ஏற்படும்.
இந்த மாதத்தில் பிறந்தவர்கள் யாரிடமும் லேசாக பழகமாட்டார்கள். பழகியவர்கள் இவர்களுக்கு துரோகம் நினைத்தால் காலம் முழுவதும் அவர்கள் முகத்தில் விழிக்கமாட்டார்கள். இந்த மாதத்தில் பிறந்தவர்களுக்கு சோம்பல் அதிகம். வேகமாக வேலை செய்துகொண்டிருக்கும்போதே திடீரென சோம்பல் தலைதூக்கி அப்படியே உட்கார்ந்துவிடுவார்கள். பணம் இவர்களிடம் சேராமல் போவதற்கு இதுவும் ஒரு காரணம். இந்த மாதத்தில் பிறந்த பெண்களுக்கு நல்ல கணவன் அமைவான். இவர்களுக்கு லேசில் கோபம் வராது.
கோபம் வந்தால் "சாது மிரண்டால் காடு கொள்ளாது" என்பதுபோல கடுமையான கோபம் வரும். இந்த குணத்தை மட்டும் நீங்கள் மாற்றிக்கொண்டால் உங்களை யாராலும் வெல்ல முடியாது. இதுபோல சோம்பல் ஏற்படும் நேரங்களில் மட்டும் அதை எப்படியாவது விடுத்து பணியில் தீவிரம் காட்டினால் வாழ்வில் வருத்தம் என்பதே இருக்காது. |
ஆனி மாதத்தில் பிறந்தவர்கள் மிகுந்த புத்திசாலிகள். இவர்களிடம் மற்றவர்களை அடக்கி ஆளும் சக்தி உண்டு. இதை பயன்படுத்திக்கொண்டு இவர்கள் வாழ்க்கையில் மிகவும் முன்னேறத் துடிப்பார்கள். இவர்களைப் பொறுத்தவரை, தானும் சிரித்து மற்றவர்களையும் மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள வேண்டும் என எண்ணுபவர்கள். இவர்களிடம் சிந்திக்கும் சக்தி அதிகம். சிந்தித்ததை செயல்படுத்த வேண்டும் என்றும் கருதுவார்கள். அதேநேரம் இவர்களுக்கு குணம் அடிக்கடி மாறுபடும். ஒரு வேலையை துவங்கி அதை செய்து கொண்டிருக்கும்போதே இன்னொரு வேலையில் கால் வைப்பார்கள். இதனால் பழைய வேலை கெட்டுப்போகும் வாய்ப்பு உண்டு.
எனவே இந்த மாதத்தில் பிறந்தவர்கள் எடுத்த வேலையை முடித்துவிட்டு, அடுத்த வேலைக்கு செல்வது நலம் பயக்கும். இவர்கள் மற்றவர்களை மயக்கும் வகையில் பேசுவார்கள். இந்த பேச்சைக்கொண்டு இவர்கள் எழுத்து மற்றும் மேடைப்பேச்சில் ஈடுபட்டால் எதிர்காலம் சிறக்கும். இவர்கள் எந்த விஷயத்தை எடுத்தாலும் சந்தேகப்படுவதும் உண்டு. இதை தவிர்க்க முயல வேண்டும். ஆரம்பிக்கும் முன்பே தீர ஆலோசித்து ஒரு வேலையை தொடங்கினால் இந்த பிரச்னைக்கு இடம் இருக்காது. இந்த மாதத்தில் பிறந்தவர்கள் ஞாபகசக்தி மிக்கவர்கள். ஆனியில் பிறந்தவர்கள் நகைச்சுவை பிரியர்கள். இவர்கள் ரோஷக்காரர்கள். மற்றவர்கள் ஏதாவது தங்களுக்கு இடையூறு செய்தால் அதற்காக வருத்தப்படவும் செய்வார்கள். எரிந்தும் விழுவார்கள். இவர்கள் மனைவி மற்றும் குழந்தைகள் மீது மிகுந்த பாசம் உள்ளவர்களாக இருப்பார்கள்.
இவர்களில் யாரையாவது தொழில் காரணமாகவோ பிற காரணங்களாலோ பிரிய வேண்டி வந்தால் அதனால் ஏற்படும் கஷ்டத்தை தாங்கிக்கொள்ளும் சக்தி அற்றவர்கள். இவர்கள் கட்டட வேலை, வண்டி இழுத்தல் போன்ற வேலைகளை செய்ய தயங்குவார்கள். இவர்களைப் பொறுத்தவரை கிளார்க் தொழில் செய்யவே அதிகமாக விரும்புவார்கள். இந்த மாதத்தில் பிறந்த பணக்காரர்கள் தொழிலதிபர்களாக இருக்கவே விரும்புவார்கள். சிறு சிறு வேலைகளை செய்ய விரும்புவதில்லை. ஆனி மாதத்தில் பிறந்தவர்களுக்கு பைனான்ஸ் தொழில் சரியாக வராது. இவர்கள் வட்டி வாங்கும் குணம் உடையவர்கள் அல்ல.
அதே போல பிறரிடம் கடன் வாங்கினாலும் உடனே திருப்பி கொடுத்துவிட வேண்டும் என்ற எண்ணத்தில் அரக்கப் பரக்க வேலை பார்ப்பார்கள். இவர்களில் சிலர் கெட்டவர்களுடன் சகவாசம் வைத்து அதனால் வாழ்க்கையையே தொலைத்து விடுவார்கள். அப்படிப்பட்டவர்கள் தீயவற்றில் இருந்து மீண்டு நல்லதையே செய்து பழகினால் மீண்டும் தீமைகள் இவர்களை அணுகாது. இந்த மாதத்தில் பிறந்த பெண்கள் தீர்க்க ஆயுளுடன் வாழ்வார்கள். இவர்களுக்கு அதிகமான குழந்தைகள் பிறப்பதற்கு வாய்ப்பு உண்டு. அதே நேரம் குழந்தைகளால் சிறிது காலம்வரை கஷ்டப்படுவார்கள். |
ஆடி மாதத்தில் பிறந்தவர்கள் கற்பனை உலகில் சஞ்சரித்துக் கொண்டிருப்பார்கள். எதிர்காலத்தை திட்டமிடுவதில் இவர்களை மிஞ்ச யாராலும் முடியாது. அந்த கற்பனைகளை செயல்படுத்துவதற்காக என்னென்ன வித்தைகளை செய்ய முடியுமோ அத்தனையும் செய்வார்கள். இந்த மாதத்தில் பிறந்த ஆணோ, பெண்ணோ யாராக இருந்தாலும் திருமணமாகி குழந்தை பெற்றுவிட்டால் இவர்கள் காட்டும் பாசத்தை வேறு யாராலும் காட்ட இயலாது. குடும்பத்தின் மீதுள்ள பாசத்தை மனதிற்குள் வைத்துக்கொண்டு, பெற்றவர்களிடமோ மற்றவர்களிடமோ காட்டமாட்டார்கள். இந்த மாதத்தில் பிறந்தவர்களுக்கு தமிழ் மொழி மீது அதிக விருப்பம் இருக்கும்.
தமிழில் அதிக மார்க் வாங்குவார்கள். இந்த மாதத்தை கடக மாதம் என சொல்வதுண்டு. கடகத்திற்குரிய சின்னமான நண்டைப்போல இவர்கள் மற்றவர்களை பேச்சில் கடித்தும் விடுவார்கள். அதே நேரம் முன்னெச்சரிக்கையாக ஒதுங்க வேண்டிய நேரத்தில் நண்டு ஓடி ஒளிந்துகொள்வது போல மறைந்தும் கொள்வார்கள். இந்த மாதத்தில் பிறந்தவர்கள் பணம் ஈட்ட வேண்டுமென்று திட்டமிட்டு அதை மட்டும் செயல்படுத்துவதில் இறங்கிவிட்டால் இவர்களை மிஞ்ச யாராலும் முடியாது. அதேநேரம் பணம் நம்மைத் தேடி வரட்டும் என இருந்துவிட்டால் பிற்காலத்தில் மிகவும் நொந்துகொள்ள வேண்டி வரும். இவர்கள் அரசியலில் ஈடுபட்டால் பழைய தலைவர்களுக்கு சிலை எடுத்தே சம்பாதித்துவிடுவார்கள்.
இவர்களை யாராவது திட்டினால் அதை பெரிதாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள். அதே நேரம் யானையைப் போல மனதில் வைத்துக்கொண்டு மறக்கமாட்டார்கள். இவர்களிடம் ஞாபகசக்தி அதிகம். இவர்களுக்கு ஒரே ஒரு அறிவுரையை சொல்லியாக வேண்டும். இவர்களுக்கு யாரையாவது பிடித்துவிட்டால் அவர்களுடன் மிக அதிகமான நட்பு கொண்டுவிடுவார்கள். அதே நேரம் அவர்களால் இடையூறு ஏற்பட்டால் வாழ்க்கையே முடிந்துவிட்டதுபோல விரக்தியின் உச்சத்திற்கு சென்றுவிடுவார்கள். இவ்வாறு செய்யாமல் நண்பர்களை பொறுத்தவரை அளவோடு இருந்து கொண்டால் வாழ்க்கையில் முன்னேறுவதை யாராலும் தடுக்கமுடியாது. ஆடி மாதத்தில் பிறந்த பெண்களால் பெற்றோர்கள் மகிழ்ச்சி குறைந்தே இருப்பார்கள். எனவே இந்த மாதத்தில் பிறந்த பெண்கள் பெற்றவர்கள் மனம் கோணாமல் நடக்க முயற்சி செய்தால், வாழ்க்கையில் மிக வேகமாக முன்னேறி விடுவார்கள். |
ஆவணியில் பிறந்தவர்கள் சுதந்திரமான தொழிலில் இருக்க விரும்புவார்கள். பெருந்தன்மையான குணம் கொண்ட இவர்கள் புகழோடு வாழ காரியங்களை சாதிப்பவர்களாக இருப்பார்கள். எதையும் உடனடியாக செய்து முடித்துவிட வேண்டும் என்ற குணமுடையவர்கள். இதன் காரணமாக இவர்களிடம் பிடிவாத குணமும் இயற்கையாகவே அமைந்திருக்கும். இவர்கள் செய்வது மட்டுமே சரி, மற்றவர்கள் செய்வதெல்லாம் தவறு என்ற எண்ணம் படைத்தவர்களாக இருப்பார்கள். இதனால் மற்றவர்களின் பழிச்சொல்லுக்கு ஆளாவார்கள். இந்த மாதத்தில் பிறந்த கடைக்குட்டி குழந்தைகளின் பேச்சுக்கு குடும்பத்தில் மதிப்பு இருக்கும். இந்த மாதத்தில் பிறந்தவர்கள் தங்கள் ஜாதகத்தை பார்த்து இவர்கள் பிறந்த சிம்ம ஸ்தானத்தில் இருந்து சூரியனின் இருப்பைப் பொறுத்து எந்த அளவுக்கு கவுரவமாக வாழலாம் என்பது பற்றி தெரிந்து கொள்ளலாம்.
இந்த மாதத்தில் பிறந்தவர்கள் வைகாசி மாதத்தில் பிறந்தவர்களை திருமணம் செய்துகொண்டால் பெரும் செல்வந்தர்களாக மாறுவார்கள். ஏனெனில் இந்த மாதங்களில் பிறந்தவர்களின் கொள்கைகள் ஒரே மாதிரியாக இருக்கும். இவர்களிடம் நிதான புத்தி இருக்கும் அளவிற்கு அவசரமும் இருக்கும் என்பதால் சில காரியங்களில் தடுமாற்றம் ஏற்படும். எனவே அவசர குணத்தை மட்டும் விட்டுவிட்டால் நல்லது. இவர்களிடம் சிக்கனம் அதிகம். அதேநேரம் வீட்டிற்கு வந்தவர்களை நல்லபடியாக உபசரிப்பார்கள். இவர்களின் உபசரிப்பை பொறுத்தே உறவினர்களும் நண்பர்களும் இவர்கள் விரிக்கும் வலையில் விழுந்து விடுவார்கள். இவர்களுக்கு கடன் வாங்குவது பிடிக்காது.
அதுபோல கடன் கொடுக்கவும் பிடிக்காது. யாரிடமாவது கடன் வாங்கும் நிலைமை ஏற்பட்டால் அதற்கு பதிலாக ஏதாவது கடன் கொடுத்த நபருக்கு உபகாரம் செய்துவிட முயற்சி செய்வார்கள். அதிகாரம் செய்யும் சுபாவம் இவர்களிடம் அதிகம். இவர்களுக்கு ஏற்ற மனைவி அமைவது மிகவும் கடினம். இதன் காரணமாக வாழ்க்கையில் தோல்வி ஏற்பட்டதாக கருதி மனம் உடைந்து போவார்கள். எனவே திருமணத்தின்போது தகுந்த மணமகளையோ, மணமகனையோ தேடிக்கொள்வது நல்லது. ஆரம்பகாலத்தில் நாத்திகராக இருக்கும் இவர்கள் காலப்போக்கில் மிகப்பெரிய ஆத்திகராக மாறிவிடும் சூழல் ஏற்படும். |
புரட்டாசி மாதம் பிறந்தவர்கள் பெரும் செல்வத்துடன் வாழ பிறந்தவர்கள். இவர்கள் முதல் போடாமலே சம்பாதிக்கும் வலிமை படைத்தவர்கள். இவர்களின் எதிர்பாராத முன்னேற்றத்தால் மற்றவர்கள் இவர்களைக் கண்டு பொறாமைப்படுவதுண்டு. இவர்களுக்கு தொழில் ரீதியாக பின்னால் என்ன நடக்கும் என்பதை கிரகிக்கும் சக்தி உண்டு. எனவே தொழில் மற்றும் வியாபாரத்தில் இவர்களை வெற்றிகொள்ள யாராலும் முடியாது. கல்வியிலும் இவர்களுக்கு முன்னேற்றம் உண்டு. அறிவியல் துறையில் ஈடுபட்டால் இவர்கள் முன்னேற்றம் காண்பார்கள். புத்தகம் படிப்பதில் இவர்களுக்கு விருப்பம் அதிகமாக இருக்கும். யாராவது தவறு செய்தால் அவர்களை தட்டிக்கேட்கும் குணம் இவர்களிடம் உண்டு. அத்துடன் திரும்பவும் அந்த தவறை செய்யாமல் இவர்கள் பார்த்துக்கொள்வார்கள். இயற்கை எழில் மிகுந்த இடங்களுக்கு சென்று வருவதிலும் இவர்களுக்கு விருப்பம் அதிகம்.
எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கும் இவர்களிடம் சில குறைகளும் உண்டு. இயற்கையாகவே இந்த மாதத்தில் பிறந்தவர்களுக்கு புத்திசாலித்தனம் அதிகம் இருந்தும்கூட ஒரு லட்சியத்தை மேற்கொண்டு அதை நிறைவேற்ற வேண்டுமென நினைக்கமாட்டார்கள். இவர்களுக்குரிய திறமை இவர்களுக்கே தெரியாமல் போய்விடுவது தான் பெரிய குறையாகும். இவர்கள் சந்தேக மனப்பான்மை மிக்கவர்களாக இருப்பார்கள். இப்போதைக்கு கிடைத்ததுபோதும் என்ற எண்ணமே அதிகமாக இருக்கும். எனவே பின்னால் வரப்போகும் பெரிய லாபத்தை விட்டுவிடுவார்கள். இதையெல்லாம் தவிர்த்து ஒரு லட்சியத்துடன் வாழ்ந்தால் இந்த மாதத்தில் பிறந்தவர்களின் எதிர்காலம் பிரகாசமாக இருக்கும்.
இவர்களுக்கு கண்ட கண்ட உணவுப் பொருட்களை சாப்பிடுவதில் விருப்பம் அதிகம். இதைத் தவிர்த்து சத்துள்ள உணவை அளவோடு சாப்பிட்டால் இவர்களது ஆரோக்கியம் நன்றாக இருக்கும். இந்த மாதத்தில் பிறந்த பெண்களை கணவன்மாருக்கு மிகவும் பிடிக்கும். ஆனால் இவர்கள் தங்கள் கணவன் வீட்டு வேலை உட்பட அனைத்தும் செய்ய வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கும் குறும்புத்தனம் அதிகமாக இருக்கும். இந்த மாதத்தில் பிறந்த பெண்களில் பலருக்கு செவ்வாய் தோஷம் இருக்கும். எனவே தக்க பரிகாரம் செய்து இவர்களை திருமணம் செய்து கொடுக்கலாம். |
ஐப்பசி மாதத்தில் பிறந்த ஆண்களும், பெண்களும் எந்த காரியத்திலும் வல்லவர்கள். இந்த மாதத்தில்தான் ராஜராஜசோழன் பிறந்தான். அவர் கட்டிய தஞ்சை கோயில் காலத்தால் அழியாத ஒன்று. அவரைப் போலவே இந்த மாதத்தில் பிறந்தவர்கள் பெரிய திட்டமாகவே போடுவார்கள். இதனாலேயே இவர்கள் அரசியல்வாதிகளாக ஆவதற்கு தகுதி கொண்டவர்கள். இவர்களைப் பொறுத்தவரை வாழ்க்கைக்குத் தேவையான அனைத்து பொருட்களையும் சேர்த்துக் கொள்வதில் ஆர்வம் இருக்கும். பெண்களிடம் பழகுவதில் இவர்களைப் போல் வல்லவர்களை காணமுடியாது. ஐப்பசி மாதத்தில் பிறந்த ஆண்களின் நட்பை பெண்களும் விரும்புவார்கள். இவர்களிடம் பொறுமை அதிகம். உழைத்துப் பிழைக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள்.
மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணமும் உண்டு. இவர்களில் சைவத்தை ஏற்றுக் கொண்டவர்கள்கூட அசைவம் சாப்பிட வேண்டும் என விரும்புவார்கள். பிறரது தேவையற்ற விஷயங்களில் தலையிடுவதில் இவர்கள் ஆர்வம் காட்டமாட்டார்கள். இவர்களிடம் உணர்ச்சிவசப்படும் பழக்கம் அதிகம். பிறர் முன்னிலையில் கவுரவமாக வாழவேண்டும் என நினைப்பார்கள். இவர்கள் மனைவிக்கு பயப்படமாட்டார்கள். இந்த மாதத்தில் பிறந்தவர்களுக்கு மூத்த சகோதரர்கள் இருப்பது அபூர்வமான ஒன்றாகும். நீதித்துறையில் நுழைந்தால் இவர்கள் ஜொலிப்பார்கள்.இந்த மாதத்தில் பிறந்த பெண்கள் எந்த வேலையையும் தாமதமாகவே செய்வார்கள். தெய்வபக்தி அதிகமாக இருந்தாலும் இவர்களிடம் கர்வமும் அதிகமாக இருக்கும். கல்லூரிக்கு சென்று படிக்காவிட்டாலும் சாதாரண கல்வி அறிவு உள்ளவர்கள்கூட ஏதாவது வேலை செய்து வாழ்க்கையை நடத்தவேண்டும் என எண்ணுவார்கள்.
இந்த மாதத்தில் பிறந்த பெண்களுக்கு நகைகள், உடைகள் மீது ஆர்வம் அதிகம். ஆனால் இவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளால் வாழ்நாள் முழுவதும் சிரமம் இருக்கும். இந்த மாதத்தில் பிறந்த பெண்களுக்கு சிறுவயதிலேயே திருமணம் நடந்துவிடும். அவ்வாறு நடக்காவிட்டால் மிகவும் தாமதமாகிவிடும். |
கார்த்திகை மாதத்தில் பிறந்தவர்கள் பயந்த சுபாவம் உடையவர்களாக இருப்பார்கள். ஆனால் அந்த பயத்தைப் போக்கி துடிப்புள்ளவர்களாக விளங்க இவர்கள் திருவண்ணாமலையில் வீற்றிருக்கும் அண்ணாமலையாரை வணங்க வேண்டும். இவர்கள் வாழ்க்கையில் கிடைத்த அனுபவங்களைக் கொண்டு எதிர்காலத்தை வகுத்துக் கொள்ளும் வல்லமை உடையவர்கள். எனவே இவர்கள் செய்யும் செயல்கள் நல்லதாகவே அமையும். ஜோதிடம் கற்றுக்கொள்ளும் தகுதி இவர்களிடம் உண்டு. இந்த மாதத்தில் பிறந்த குழந்தைகளின் காதுகளை டாக்டரிடம் பரிசோதித்துக் கொள்வது நல்லது. கார்த்திகை இடியும் மின்னலும் உடைய மாதம் ஆதலால் இந்த சத்தத்தைக் கேட்டு குழந்தைகளின் காதுகள் பாதிக்கப்படலாம் என கூறுவார்கள்.
இந்த மாதத்தில் பிறந்தவர்கள் இளமையிலேயே பல சோதனைகளை சந்திப்பார்கள். அந்த சோதனைகளால் ஆத்திரம் ஏற்பட்டு செய்யக்கூடாத செயல்களை செய்து விடுவதும் உண்டு. எனவே பொறுமையுடன் இருப்பது மிகவும் நல்லது. இவர்கள் இயற்கையிலேயே தாகம் உடையவர்களாக இருப்பார்கள். ஆத்திரக்காரர்களாக இருப்பதால் இவர்கள் தங்கள் தவறுக்கு மன்னிப்பு கேட்டு அடிக்கடி கோயிலுக்கு செல்வார்கள். இப்படியே சென்றுகொண்டிருக்கும் இவர்கள் பெரும் பக்தர்களாக மாறி ஞான மார்க்கத்திற்கே சென்றுவிடுவார்கள். இந்த மாதத்தில் பிறந்த பெண்களின் நிலை சிறப்பாக இருக்கும். முருகனை வளர்த்த கார்த்திகை பெண்களுக்குரிய மாதம் இது. எனவே முருகனை இந்த மாதத்தில் பிறந்த பெண்கள் வணங்கிவந்தால் சகல சவுபாக்கியங்களுடன் விளங்குவார்கள்.
இவர்கள் குழந்தையைப் போல மற்றவர்களிடம் பழகுவார்கள். இந்த மாதத்தில் பிறந்த பெண்களை திருமணம் செய்துகொள்ளும் ஆண்களுக்கு சகல பாக்கியங்களும் உண்டாகும். இந்த பெண்கள் பெரியவர்களிடம் மரியாதையாக நடப்பார்கள். விரதங்கள், தானம், தர்மம் செய்வதில் வல்லவர்கள். இந்த பெண்களுக்கு எதிரிகள் இருக்க வாய்ப்பில்லை. இவர்கள் ஏராளமாக செலவு செய்வார்கள். இதனால் கணவன் மனைவி இடையே சிறு மனஸ்தாபங்கள் வரலாம். இதைத் தவிர்த்துவிட்டால் இந்தப் பெண்களை அசைக்க யாராலும் முடியாது. இவர்களுக்கு அரசு துறைகளில் வேலை கிடைக்கும் வாய்ப்பு அதிகம். லாட்டரி விஷயத்தில் ஆர்வம் கூடுதலாக இருக்கும். இதையும் இவர்கள் தவிர்க்க வேண்டும். |
குளிர்ந்த மாதமான மார்கழியில் பிறந்தவர்கள் எந்த விஷயத்திலும் தனித்தன்மையுடன் இருக்க வேண்டும் என விரும்புபவர்கள். ஒரு காரியத்தை துவங்கினால் அதை முடிக்காமல் தூங்க மாட்டார்கள். இவர்களுக்கு அரசியல், ஆன்மிகம், தத்துவம், அரசு பணிகளில் நிர்வாகம் போன்ற உயர்பணிகள் ஏற்றவை. இதில் ஈடுபட்டால் இவர்களால் செல்வத்தை குவிக்கமுடியும். ஆடம்பரத்தில் இவர்கள் விருப்பம் கொண்டவர்கள். சம்பாத்தியம் குறைவாக இருந்தாலும் அதிகமாக செலவழிக்க வேண்டும் என விரும்புவார்கள். இதன் காரணமாக இவர்கள் வாழ்க்கையின் பின்பகுதியில் சிரமப்படுவார்கள்.
எனவே இவர்கள் இந்த குணத்தை மாற்றிக்கொண்டு எதிர்காலத்தைப் பற்றி யோசித்து நடந்து கொள்ள வேண்டும். இவர்கள் ஒரு சைக்கிளில் சென்றால்கூட வேகமாக செல்லவேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள். அதே நேரம் பெரிய பிரச்னைகளை சந்திக்க நேர்ந்தால் அப்படியே இடிந்து போவார்கள். இந்த நேரத்தில் இறைவனை வணங்கி அமைதியாக இருக்க கற்றுக்கொள்ள வேண்டும். சிறந்த எழுத்தாளர்களாகவும் இவர்கள் இருக்க வாய்ப்பு இருக்கிறது. இவர்கள் முக்கியமான எதைப்பற்றியாவது எழுதினால் அது உலகின் தலைவிதியையே மாற்றும் தன்மை கொண்டதாக இருக்கும். இந்த மாதத்தில் பிறந்த பெண்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இவர்களுக்கு கெட்ட சிநேகிதங்கள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.
கெட்டவர்களுடன் சேர்ந்து மோசமான உணர்ச்சிகளுக்கு அடிமைப்படும் வாய்ப்பு அதிகம். இதற்காக பின்னால் மிகவும் வருத்தப்படுவார்கள். அதே நேரம் படிப்பில் மிகுந்த கவனத்துடன் இருப்பார்கள். இவர்களுக்கு திருமணத்தில் அதிக விருப்பம் இருக்காது. அதேநேரம் ஆண்கள் பெண் நண்பர்களுடனும், பெண்கள் ஆண் நண்பர்களுடனும் வாழ்வதற்கு பிரியப்படுவார்கள். மொத்தத்தில் சுதந்திரமான வாழ்க்கையை இந்த மாதத்தில் பிறந்த பெண்கள் விரும்புவர். எனவே பொருத்தமான வாழ்க்கை துணையை தேடிக்கொண்டால் வாழ்க்கை இனிமையாக அமையும். |
தை மாதத்தில் பிறந்தவர்கள் கஞ்சத்தனம் உடையவர்கள். ஒருவருக்கு பத்து காசு செலவழித்தால் தனக்கு பத்து ரூபாய் வருமானம் வருமா என பார்த்து செலவு செய்வார்கள். கடமையில் கெட்டிக்காரர்கள். உயர் அதிகாரிகளை கைக்குள் வைத்துக்கொண்டு பணம் கொடுத்தாவது காரியத்தை சாதித்துக் கொண்டு விடுவார்கள். இதன்மூலம் ஏராளமான வருமானம் பெறுவார்கள். தை மாதத்தில் பிறந்தவர்களை நம்பி மற்றவர்கள் எந்தக் காரியத்திலும் இறங்கக்கூடாது. இவர்களுக்கு விவசாயம் மற்றும் மனைகள் வாங்கி விற்பது ஏற்ற தொழிலாக இருக்கும். இந்த மாதமே விவசாய மாதம் என்பதால் இவர்கள் முழுமையாக விவசாயத்தில் ஈடுபடுவது பெரும் லாபம் தரும். அதே நேரம் இவர்கள் எதிலும் அவசரப்படாமல் நிதானமாக செயல்பட்டால் வெற்றிகள் பெருகும்.
இவர்கள் ஒரு அழகிய அல்லது பயனுள்ள பொருளைப் பார்த்தால் அந்தப் பொருளைவிட அதை செய்தவரையே பாராட்டுவார்கள். அப்படிப்பட்டவர்களை சென்று பார்த்து தாங்களும் அந்த தொழிலில் இறங்கினால் என்ன என்று நினைப்பவர்கள். தை மாதத்தில் பிறந்த பெண்கள் அழகாக இருப்பார்கள். வயதான காலத்தில் கூட மேக்கப் போட விருப்பப்படுவர். மற்ற பெண்களுடன் நெருங்கிப் பழகமாட்டார்கள். இவர்களுக்கு உடன் பிறந்தவர்கள் இருப்பது அபூர்வமான விஷயம். திருமணமான பிறகு கணவர் கணக்கில் எவ்வளவு பணம் இருக்கிறது என்று யோசிப்பதைவிட தனது பொறுப்பில் எவ்வளவு உள்ளது என்று கணக்குப்போடும் குணம் இவர்களிடம் உண்டு.
காதல் விஷயத்தில் இவர்கள் மிகவும் கவனமாக இருப்பது நல்லது. காதல் திருமணம் இவர்களுக்கு ஒத்துவராது. குழந்தைகளை வளர்க்க தை மாதத்தில் பிறந்தவர்கள் மிகுந்த சிரத்தை எடுத்துக் கொள்வார்கள். அவர்களது முன்னேற்றத்தில் மிக மிக கவனமாக இருப்பார்கள். குழந்தைகளுக்கு செல்லம் கொடுப்பதில்லை. இந்த மாதத்தில் பிறந்த குழந்தைகளுக்கு திரும்பத்திரும்ப விஷயங்களை சொல்ல வேண்டும். இல்லாவிட்டால் இவர்கள் என்ன சொன்னாலும் தங்கள் இஷ்டம் போலவே நடந்து கொள்வார்கள். அதே நேரம் படிப்பிலும் விளையாட்டிலும் குழந்தைகள் அதிக கவனம் செலுத்துவார்கள். |
மாசி மாதத்தில் பிறந்தவர்கள் முன்கோபக்காரர்கள். குழந்தைகள் அதிகம் பிறக்காது. இவர்களிடம் யாராவது உண்மையை மறைத்தால் அதை அறிந்துகொள்ளும் வல்லமை உடையவர்கள். விஞ்ஞானத்தில் ஆர்வம் உண்டு. எதை எந்த வேளையில் செய்தால் பலன் கிடைக்கும் என்பதை அறிந்து திட்டமிட்டு காரியம் செய்யக்கூடியவர்கள். இவர்களில் சிலர் பிறந்த ஊரில் சிலகாலம் தான் இருப்பார்கள். பின்பு பிழைப்புக்காக பல்வேறு இடங்களுக்கும் சென்று விடுவார்கள். கஷ்டப்பட்டு பொருள் சம்பாதிப்பார்கள். இவர்கள் தங்களைத் தாங்களே அழகில் சிறந்தவர்களாக எண்ணிக்கொண்டு கர்வத்துடன் நடப்பார்கள்.
இந்த எண்ணத்தை மாற்றிக்கொண்டால் வாழ்வில் வெற்றி பெறலாம். இந்த மாதத்தில் பிறந்த பெண்கள் காதல் திருமணத்தில் ஆர்வம் உள்ளவர்கள். புகுந்த வீட்டில் இவர்கள் செல்வ செழிப்புடன் வாழ்வார்கள். கணவனை கைக்குள் வைத்திருப்பார்கள். இவர்கள் அனைவருடனும் சகஜமாக பழகும் தன்மை கொண்டவர்கள். எனவே ஏராளமான நண்பர்கள் கிடைப்பார்கள். உறவினர்களை நேசிப்பார்கள். அடிக்கடி வீட்டிற்கு உறவினர்களும் நண்பர்களும் வருவார்கள் என்பதால் வீட்டை சுத்தமாக வைத்திருப்பதும் ஆடம்பர பொருட்களை வாங்கவும் ஆசைப்படுவார்கள். இதனால் அதிகச் செலவுகள் ஏற்படும். இதைத் தவிர்த்து தங்கள் வருமானத்திற்கு ஏற்றவகையில் பொருட்களை வாங்கிக் கொள்வது எதிர்கால சேமிப்புக்கு உதவும்.
தங்கள் இஷ்டப்படிதான் எதுவும் நடக்க வேண்டும் என்ற கொள்கையிலிருந்து இவர்கள் மாறுபட்டவர்கள். அடுத்தவர்களை அனுசரித்து செல்வார்கள். தொழிலில் அதிக அக்கறை காட்டும் குணம் இவர்களிடம் உண்டு. இந்த மாதத்தில் பிறந்தவர்கள் வெங்கடாசலபதியையும், பத்ரகாளியையும் வணங்கிவந்தால் இவர்களுக்கு ஏற்படும் இன்னல்கள் விலகும். இந்த மாதத்தில் பிறந்த குழந்தைகளிடமும் புத்திசாலித்தனமும் ஆரோக்கியமும் உண்டு. கல்வியில் ஆர்வம் இருக்கும். தங்களுக்கு சம அந்தஸ்தில் உள்ள குழந்தைகளிடமே பழகுவர். |
பங்குனி மாதத்தில் பிறந்தவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டியவர்கள். இவர்கள் விரைவில் போதைப்பழக்கத்திற்கு ஆளாகிவிடுவார்கள். அதிகமான மனக்கஷ்டங்கள் ஏற்படும் என்பதால் இந்த பழக்கம் உருவாக வாய்ப்புண்டு. எனவே போதைக்கு அடிமையாகாமல் தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும். இவர்கள் திரைப்படத் தொழிலுக்கு ஏற்றவர்கள். சிற்பக்கலையிலும் ஆர்வம் உண்டு. இயற்கைக் காட்சிகளை ரசிப்பார்கள். கலையை தெய்வமாக கருதி வழிபடுவார்கள். முன்கோபம் அதிகமாக வரும். தெய்வத்தின் மீது பாரத்தைப் போட்டுவிட்டு உழைப்பை மறந்துவிடும் குணமுண்டு.
தெய்வ பக்தி அவசியமே எனினும் செய்யும் தொழிலே தெய்வம் என்பதையும் இவர்கள் மனதில் கொள்ள வேண்டும். இந்த மாதத்தில் பிறந்த பெண்கள் படபடப்புடன் பேசுவார்கள். நாகரீகமாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் உண்டு. சினிமா கவர்ச்சி அதிகம். எனவே இவர்கள் ஏமாந்து போகும் நிலையும் வரலாம். கலைத்துறைக்கு செல்பவர்கள் மிக கவனமாக இருக்க வேண்டும். இந்த பெண்களில் சிலர் இளவயதில் வறுமையில் வாடும் வாய்ப்பு உண்டு. இவர்களில் பலருக்கு பெண்குழந்தைகளே பிறக்கும். எழுத்து தொழிலுக்கு இவர்கள் ஏற்றவர்கள். எப்போதும் கற்பனை உலகில் சஞ்சரித்துக் கொண்டிருப்பார்கள்.
சுற்றிவளைத்துப் பேசும் குணமுடையவர்கள். எதிலும் முன்ஜாக்கிரதையாக இருப்பார்கள். மற்றவர்கள் இவர்களை பாராட்டி பேசினால் அதில் மயங்கி விடுவார்கள். ஆன்மிகத் துறையில் ஈடுபட்டால் இவர்களுக்கு நல்ல எதிர்காலம் உண்டு. பசிதாங்கும் சக்தி இவர்களிடம் அதிகம். பங்குனியில் பிறந்த குழந்தைகளிடம் பொய்சொல்லும் வழக்கம் அதிகமாக இருக்கும். பெற்றோருக்கு கட்டுப்படாமல் தங்கள் இஷ்டப்படி நடப்பார்கள். இந்த குழந்தைகளை வளர்ப்பதில் அதிக அக்கறையுடன் செயல்பட வேண்டும். இவர்களுக்கு சிறு வயதிலேயே தன்னம்பிக்கையை ஊட்டி வளர்ப்பது நல்லது.
|
No comments:
Post a Comment